Published on 13/02/2020 | Edited on 13/02/2020
திருப்பூர் மாவட்டம், குண்ட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் இருக்கிறார்.
![kovai incident... police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y78KWijs0za0U7nfwe2QQDn-NBYNZZtq-XjVuqT3vls/1581585539/sites/default/files/inline-images/tyuyuyuyutu.jpg)
இந்நிலையில் இன்று அதிகாலை நெஞ்சு வலி என்று கூறியவரை மத்திய சிறை காவலர்கள் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் காவலர்களிடமிருந்து தப்பியோடி விட்டார் சுப்பிரமணியம்.
![kovai incident... police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/aQnRh0-qjJWoxAB_0siPMssywP4s_gUZMKxvwi7Tfrs/1581585558/sites/default/files/inline-images/uyu.jpg)
உடனே, சிறை காவலர்கள் பந்தையசாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். தப்பித்து ஓடிய சுப்பிரமணியத்தை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.