காஞ்சிபுரத்தில் மீண்டும் துளிர் விடும் கொலை சம்பவம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காஞ்சிபுரத்தை கலக்கிவந்த ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பின் அரசியல் ஆதாய கொலைகள் குறையும் என்று மக்கள் பெருமூச்சுவிட்டிருந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவங்கள் துளிர் விட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2ஆம் தேதி காசிமேட்டை சேர்ந்த ரவிந்தரன் என்ற ரவுடி திருப்போரூரில் வெட்டி கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவத்தை தொடர்ந்து மறைமலைநகரை சேர்ந்த அஸ்வின் என்பவன் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டான்.
கடந்த 4 ஆம் தேதி கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திமுக பிரமுகர் ரவி வீட்டின் முன் பைக்கில் வந்த மர்மநபர் நாட்டுவெடிகுண்டு வீசியதில் ரவியின் அண்ணன் குமார் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் போரூர் அதிமுக பொருளாலர் ஆக இருந்த தமிழ்ச்செல்வன் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே இருக்கும் அலுவலகத்தை மூடிவிட்டு திரும்பிய போது 5 பேர் கொண்ட மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சில காலம் அமைதியாக இருந்த மாவட்டத்தில் மீண்டும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்களை விட கட்சி பிரமுகர்களே கடும் அச்சத்தில் உள்ளார்கள்.
- அரவிந்த்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காஞ்சிபுரத்தை கலக்கிவந்த ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பின் அரசியல் ஆதாய கொலைகள் குறையும் என்று மக்கள் பெருமூச்சுவிட்டிருந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவங்கள் துளிர் விட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2ஆம் தேதி காசிமேட்டை சேர்ந்த ரவிந்தரன் என்ற ரவுடி திருப்போரூரில் வெட்டி கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவத்தை தொடர்ந்து மறைமலைநகரை சேர்ந்த அஸ்வின் என்பவன் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டான்.
கடந்த 4 ஆம் தேதி கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திமுக பிரமுகர் ரவி வீட்டின் முன் பைக்கில் வந்த மர்மநபர் நாட்டுவெடிகுண்டு வீசியதில் ரவியின் அண்ணன் குமார் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் போரூர் அதிமுக பொருளாலர் ஆக இருந்த தமிழ்ச்செல்வன் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே இருக்கும் அலுவலகத்தை மூடிவிட்டு திரும்பிய போது 5 பேர் கொண்ட மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சில காலம் அமைதியாக இருந்த மாவட்டத்தில் மீண்டும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்களை விட கட்சி பிரமுகர்களே கடும் அச்சத்தில் உள்ளார்கள்.
- அரவிந்த்