Skip to main content

மேகதாது விவகாரம் - கர்நாடக முதல்வரின் கொடும்பாவி எரிப்பு!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
h

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. 

 

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன்  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது,  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், கர்நாடக அரசின் அராஜக போக்கை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் எனவும்  முக்கிய வீதிகள் வழியாக முழக்கங்கள் எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றவர்கள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணாடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்