Skip to main content

பதவியேற்ற போது தாய் தந்தைக்கு சல்யூட்! அரசுப் பள்ளியில் மகன்! கவனம் ஈர்க்கும் குமரி எஸ்.பி! 

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

Kanyakumari SP Harikiran Prasad son studying in Government school

 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக ஆட்சி அமைத்தவுடன் எடுத்த முயற்சியால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு தனியார் பள்ளிகளில் படித்து கொண்டிருந்த பிள்ளைகளை பெற்றோர்கள் தானாக முன் வந்து அரசு பள்ளிகளில் சோ்த்தனர். அது வரும் கல்வியாண்டிலும் தொடரும் விதமாக அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.  

 

இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி குமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த ஹரிகிரன் பிரசாத் நியமிக்கப்பட்டார். ஐதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டியில் படிப்பை முடித்து 2016-ல் ஐ.பி.எஸ் முடித்தார். திருச்சி, வள்ளியூர், சென்னை என காவல் பணியை மேற்கொண்ட ஹரிகிரன் பிரசாத் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதும் அரசு பள்ளிகள் மீது இருந்த அவருடைய மோகத்தால் தனது 5 வயது மகன் நஸ்ரித்தை அரசு பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்தார்.

 

Kanyakumari SP Harikiran Prasad son studying in Government school

 

தனது விருப்பத்துக்கு மனைவி விஷாலா ஹரியும் சம்மதம் தெரிவிக்க நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு பள்ளியில் மகன் நஸ்ரித்தை  கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொண்டு சேர்த்தனர். அரசு பள்ளி சீருடை அணிந்து கொண்டு உற்சாகத்துடன் சென்ற நஸ்ரித்தை மகிழ்ச்சியோடு வரவேற்ற சக மாணவர்களும்,  ஆசிரியர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார்கள்.


இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் கூறும் போது, “தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் கோலோச்சி கொண்டிருக்கின்றன. அந்த பள்ளிகளில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தான் எனது மகனையும் சேர்த்துள்ளேன். அதற்கேற்றார் போல் மகனின் கல்வி தரமும் உயரும்” என்றார்.

 

Kanyakumari SP Harikiran Prasad son studying in Government school

 

இதற்கிடையில் ஹரிகிரன் பிரசாத் காவல் கண்காணிப்பாளராக பதவியேற்று கொண்டதும் தனது முதல் கடமையாக தந்தை நரசிம்மலு மற்றும் தாயார் கஸ்தூரிக்கு சல்யூட் அடித்து பெருமைப்பட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.