Skip to main content

“நீ ஏன் சாகணும் நானே உன்னை கொல்றேன்...” ஆண் நண்பரை 30 இடங்களில் குத்தி கொலை செய்த பேராசிரியை! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Kanyakumari illegal relationship passed away police arrested college professor

 

திருமணத்தை மீறிய உறவில் ஆண்களும், பெண்களும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு அவர்களின் வாரிசுகள் அல்லல்படுவதும் தொடர் கதையாக உள்ளது. அப்படி குமரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பலாின் மனதை உருக வைத்துள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவிலை சேர்ந்தவர் ரதீஷ் குமார் (35). இவர், ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர் தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்தத் தம்பதி  ஆரல்வாய்மொழியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில், நேற்று (13-ம் தேதி) மதியம் ரதீஷ்குமாரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைத்து மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெனிஃபர் (36 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கத்தி மற்றும் குத்தூசியால் குத்தி கொலை செய்து விட்டு, ஆரல்வாய்மொழி போலீசாரை மருத்துவமனைக்கு வரவழைத்து சரணடைந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவும் ஜெனிஃபரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது கொலைக்கான சம்பவத்தை எந்த பதட்டமுமின்றி போலீசாரிடம் அவர் கூறினார். அவர் கூறியதாவது; “நான் எம்.எஸ்.சி, பி.எட்., எம்ஃபில் முடித்து ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தேன். எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் ரதீஷ்குமார் 2013-ல் கருங்கல் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை பார்க்கும் போது, பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்க அங்கு சென்றேன். அப்போது எனக்கு ரதீஷ்குமார் அனைத்து உதவிகளையும் செய்து தந்தார். அதன் பிறகு எங்களுடைய பழக்கம் தொடர்ந்து நீடித்தது. இந்தப் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினோம்.


இதற்கிடையில் திருமணமாகாத ரதீஷ் குமார் என்னை திருமணம் செய்து கொள்ள, கணவரை விவாகரத்து செய்ய சொன்னார். அவர் பேச்சை நம்பி கணவரையும் விவாகரத்து செய்தேன். அதன் பிறகு தேவைப்படும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்தேன். அப்படி பல லட்சங்களை கொடுத்துள்ளேன். சொத்து பத்திரத்தையும் அடமானம் வைத்து கொடுத்துள்ளேன்.


மேலும் ‘இனி, நீ வேலைக்கு போகக் கூடாது” என்றார். என் மீது இவ்வளவு ஆசை வச்சியிருக்கிறாரே என நினைத்து அவருக்காக வேலையை ரிசைன் செய்தேன். அவரையை முழுசாக நம்பி இருந்த எனக்கு துரோகம் செய்துவிட்டு கடந்த ஆண்டு எனக்கு தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

 

இதை அறிந்து அவரிடம் சண்டை போட்டேன். அப்போது, ‘நான் அவளை 3 மாதத்தில் டைவா்ஸ் செய்து விடுவேன்’ என கூறி சமாதானம் செய்து அனுப்பினார். ஒரு முறை ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வைத்து கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றேன். அப்போது ரதீஷ்குமார் என் கைக்கு மருந்து வைத்து கட்டு போட்டு சமாதானம் செய்து அனுப்பினார். ஆனால், அவர் என்னை திருமணம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 

இந்த நிலையில் என்னுடன் தொடர்பை துண்டித்த அவரை நான் ஒரு முறை தொடர்பு கொண்ட போது, ‘இனி என்னை தொந்தரவு செய்தால் உன் பெயரை எழுதி வைத்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்றார். அப்போது நீ ஏன் தற்கொலை செய்யணும்; நானே உன்னை கொல்லுறேன் என மனசுக்குள் முடிவு செய்தேன். 

 

இதற்காக கத்தியும் மரவேலைக்கு பயன்படுத்தக் கூடிய குத்தூசியையும் எடுத்து வைத்து கொண்டு அவரை கொலை செய்வதற்கான தருணத்துக்காக காத்து கொண்டிருந்தேன். இந்த நிலையில், 13-ம் தேதி என் பிறந்த நாளையொட்டி வாழ்த்து சொன்ன ரதீஷ்குமார் வழக்கம் போல் மதியம் மருத்துவமனையில் யாரும் இல்லாத நேரம் என்னை அங்கு அழைத்தார். இது தான் சரியான நேரம், இன்னைக்கு அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற முடிவோடு, மீன் கூட்டோடு சோறும் சமைத்து கொண்டு போனோன்.

 

அவரை கத்தியால் குத்தும் போது தடுத்து விடக்கூடாது என்பதற்காக, அவரை மயக்க நிலைக்கு கொண்டு வந்து தான் குத்தி கொலை செய்ய வேண்டுமென முடிவு செய்து; சாப்பட்டில் விஷம் கலந்து வைத்திருந்தேன். மருத்துவமனைக்கு சென்றதும் வழக்கம் போல் என்னிடம் அன்பாக பேசி சமாதானம் செய்தார். பின்னர் நானே சாப்பாடு பரிமாறி கொடுத்த கொஞ்ச நேரத்தில் மயக்கமான நிலைக்கு வந்ததால், உடனே மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் குத்தூசியால் கோபம் தீரும் வரை கழுத்திலும் மார்பிலும் குத்தி கொலைச் செய்தேன்” என்றார்.

 

இதற்கிடையில் மதியம் சாப்பாட்டுக்கு ரதீஷ்குமார், வீட்டுக்கு வராததால் போன் செய்து பார்த்த அவருடைய மனைவி, கணவனை தேடி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு போலீசாரும், பொது மக்களும் கூடி நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கணவர் கொலை செய்யப்பட்டு உள்ளதை அறிந்து கதறி அழுதார். மேலும் ரதீஷ்குமார் உடலில் 30 இடங்களில் கத்தி குத்துகள் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.