Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை! (படங்கள்)

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுகவின் பொருளாளரும், மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர். பாலு, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

அதனைத் தொடர்நது, கலைஞர் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் 38,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் என மொத்தம் 38,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. 36 தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்