Skip to main content

'காக்கா முட்டை' இயக்குநர் வீட்டில் திருட்டு; கடிதத்துடன் வந்த தேசிய விருது

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
'kakka muttai' director's house burglarized; National award with letter

காக்கா முட்டை திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மர்ம நபர் திருட்டில் ஈடுபட்ட நிலையில், இயக்குநருக்குத் திருடர்கள் கடிதம் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி தேசிய விருது பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எழில் நகர்ப் பகுதியில் மணிகண்டன் வசித்து வருகிறார். அடுத்த திரைப்படப் பணிகளுக்காக கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டில் திருட்டு நிகழ்ந்துள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல மணிகண்டன் தன் படத்திற்காக வாங்கிய இரண்டு தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'kakka muttai' director's house burglarized; National award with letter

இந்த நிலையில், 'அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு' என்று இரண்டு வரிகள் எழுதப்பட்ட கடிதத்தையும் தேசிய விருதுக்கான பதக்கங்களையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டு கேட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். உசிலம்பட்டி காவல்துறையினர் அந்த கடிதத்தை கைப்பற்றிய தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்