Skip to main content

நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் - கருத்தரங்கம்! திராவிடர் கழகம் அறிவிப்பு

Published on 31/03/2018 | Edited on 01/04/2018



 

parliament

 

நீட் உள்பட சமூகநீதிக்காக புதுடில்லியில் ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்றம்முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் (ஜந்தர் மந்தர்) ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கருத்தரங்கமும் நடைபெற உள்ளதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு அமைப்புகளின் மாணவர்கள் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. 
 

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
 

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி
இடம்:ஜந்தர் மந்தர், நாடாளுமன்றச் சாலை, புதுடில்லி
தலைமை:  கி.வீரமணி அவர்கள்
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர்கள், அனைத் திந்திய அளவிலான நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், மாணவர்கள், சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவையைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளின் பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள்.
 

சமூகநீதிக் கருத்தரங்கம்
 

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி
இடம்: அவைத் தலைவர் அரங்கம், கான்ஸ்டிடியூசன் கிளப், நாடாளுமன்றம் அருகில், புதுடில்லி
 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
 

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டுவருதல்
மருத்துவ உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீட்டை முழுமையாக செயல்படுத்துதல்
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு
மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு
பங்கேற்பாளர்கள்
 

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு:
 

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடா ளுமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற் றக் கழகம்)
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
பெ.விசுவநாதன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ்)
அ.கணேசமூர்த்தி (மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர், பொருளாளர், மதிமுக)
தோழர் து.ராஜா (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
தோழர் டி.கே.ரங்கராஜன் (நாடாளு மன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-, மார்க்சிஸ்ட்)
குர்ரம் அனீஸ் உமர் (தேசிய செய லாளர், இந்திய யூனியன் முசுலிம் லீக்)
பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
மு.தமிமுன் அன்சாரி (சட்டப் பேரவை உறுப்பினர், பொதுச் செய லாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி)
கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி (மாநில தலைவர், எஸ்.டி.பி.அய்)
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி
 

அகில இந்திய அமைப்புகள்
 

பேராசிரியர் அனில் சட்கோபால் (கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் AIFRTE)
தோழர் விசுவஜித் குமார் (பொதுச் செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்)
அகில இந்திய மாணவர் போராட்டக் கவுன்சில் (AICSS) பிரதிநிதிகள்,
 

மருத்துவர் அமைப்புகள்
 

டாக்டர் ஜி.ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்)
டாக்டர் நந்தகுமார் (கூடுதல் செய லாளர், தமிழ்நாடு மருத்துவ அலுவ லர்கள் சங்கம்)
 

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை
 

சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டப் பேரவை உறுப்பினர்,மாநில செயலா ளர்,திராவிட முன்னேற்றக் கழக மாண வரணி)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
தி.ஆ.நவீன் (பொறுப்பாளர், தமிழ் நாடு மாணவர் காங்கிரஸ்)
வழக்குரைஞர் செஞ்சுடர் (மாநில துணைச் செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம்)
புளியங்குடி எம்.முகமது அல் அமீன் (தேசிய இணைச் செயலாளர், முசுலிம் மாணவர் பேரவை)
நூருதீன் (மாநில செயலாளர், சமூகநீதி மாணவர் இயக்கம்)
எஸ்.முஸ்தபா (மாநில தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா)
முகம்மது அசாருதீன் (மாநில செய லாளர், மாணவர் இந்தியா)
இளையராஜா (தலைவர், தமிழ்நாடு மாணவர் முன்னணி)
சிறீநாத் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி)
கா.அமுதரசன் (அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம்)
மற்றும் மாணவர் அமைப்புகள், சிறுபான்மை இயக்கங்கள், கல்வியாளர் குழுக்களின் பிரதிநிதிகள்.

சார்ந்த செய்திகள்