Skip to main content

காடுவெட்டி குரு மகளுக்கு திடீர் திருமணம்! பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
j.guru



மறைந்த காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகைக்கும் குருவின் மூன்றாவது தங்கை  சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் 28.11.2018 புதன்கிழமை காலை கும்பகோணம் கோவிலில் திடீர் திருமணம் நடந்துள்ளது. மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் குரு மகன் கனலரசன் மற்றும் சில முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் நடந்த கையோடு காவல் நிலையத்திற்க்கு சென்று பாதுகாப்பு கேட்டு மணமக்கள் புகார் அளித்துள்ளார்களாம். 

 

j.guru Daughter Marriage



இந்த திருமணத்தில் குருவின் மனைவி சொர்ணலதா கலந்து கொள்ளவில்லை. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரு மகன் கனலரசன், தன் தாயாரை அவரது உறவினர்கள் பார்க்கவிடவில்லை. அவரை மீட்டு தர வேண்டும் என வீடியோவில் பேசி வெளியிட்டார். அதையடுத்து சில நாட்களில் குருவின் தயார் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் ஆண்டிமடம் வைத்தியிடம் குருவின் தாயார், என் மகனை வைத்து பலனைடைந்தீர்கள். எங்கள் குடும்பத்தில் திரும்பிய திசை எல்லாம் கடனாக உள்ளது என்று தலையில் அடித்து கொண்டு கோபமும் ஆவேசமுமாக பேசியது வீடியோ காட்சியாக வந்து பரபரப்பை உண்டாக்கியது.
 

j.guru Daughter Marriage



இந்த நிலையில் இப்போது குருவின் மகளின் திடீர் திருமண செய்தி மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. குரு உயிரோடு இருந்தபோது மேடையில் பேசி பரபரப்பை உண்டாக்குவார். இப்போது அவரது குடும்பத்தினர்களும் அவ்வப்போது பரபரப்பை உண்டாக்கி வருகிறார்கள். இவைகளை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் பாமக தரப்பினரும் மெளனமாக உள்ளனர். இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
 

j.guru



ஜெ.குரு இருந்தபோதும் தற்போது மறைந்த பிறகும் பாமகவைச் சேர்ந்த பலர் அவரது புகைப்படம் இல்லாமல் திருமண பத்திரிக்கை அடிக்க மாட்டார்கள். திருமண பேனர்களில் அவரது படங்கள் இடம்பெறும். ஆனால் அவரது மகள் திருமணம், அவர் மறைந்து சில மாதங்களிலேயே மிக எளிமையாக நடந்தது பலருக்கு வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு பாமகவினர் வாழ்த்துக்களை வாட்ஸ் அப்புகளில் தெரிவிக்கின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.