Skip to main content

திமுகவுக்கு தலைமை  தாங்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை! அமைச்சர் சீனிவாசன் பேச்சு!!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019


திமுகவுக்கு தலைமை தாங்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை என திண்டுக்கல்லில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

 

sr


.

முன்னாள் முதல்வர் ஜெ. வின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக அரசின் சாதனை‌ மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அதற்கான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில்  நடந்தது.       இக்கூட்டத்திற்கு வருவாய் துறை மற்றும் ஜெ. பேரவையின் மாநில செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஜெ. பேரவை செயலாளர்  ராஜன் அனைவரையும் வரவேற்றார்.   இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,  ஜெ. பேரவையின் மாநில இணைச்செயலாளர்  கண்ணன்.,  தேனி மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ரவீந்திரநாத், அதிமுக மாவட்டச் செயலாளர் மருதராஜ்,  வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம்,  சீனிவாசா ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன்  உள்பட  ஜெ. பேரவையின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டும் பேசினார்கள்.


 
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசும்போது.... வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது நடத்திவரும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதியோர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் திமுக தலைமையில் 5 முறை ஆட்சி நடந்தபோது கட்சிக்கு வேண்டியவர்கள் வெளிநாட்டிலிருப்பவர்கள் வெளிமாநிலங்களில் வசிப்பவர்களுக்கு அதிக அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டது.   இது குறித்து சட்ட சபைக் கூட்டங்களில் அதிமுக ஆதாரத்துடன் அறிவித்தது.  ஆனால் அதிமுக ஆட்சியில் இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.   மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான நிதியுதவியாக 2000 வழங்கப்படுகிறது. எனவே பாடுபடுபவர்கள் யார் பாசாங்கு செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.

 

s


.   இறுதியாக இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ... தமிழக மக்கள் மனதில் கடந்த 40 ஆண்டு காலமாக அதிமுக இடம் பிடித்துள்ளது.  ஆனால் அதிமுக  ஆட்சிக்கு முடிவு வரும் நாட்கள் அதன் நிர்வாகிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி வருகிறார்.  ஆனால் திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.  எனவே திமுகவுக்கு தலைமை தாங்கும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததையும்,  கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடக்காமல் போன காரணத்திற்கும் மு. க ஸ்டாலின் கூறுகிறார்.  ஆனால் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்தது திமுக தான்.  அதனால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வில்லை.  அது போல் திருவாரூர் இடைத்தேர்தலுக்கு கஜா புயலை காரணம் காட்டி தடை வாங்கிவிட்டனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொலை குற்றவாளி என காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார். ஆனால் அது நடக்காது என்று கூறினார்.

  
இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருமாறன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.