Skip to main content

ஜெ.,நினைவு தினம்: அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்துடன் அஞ்சலி!

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
ஜெ.,நினைவு தினம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
குடும்பத்துடன் அஞ்சலி!



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் ர.ரக்கள் ஜெயலலிதா படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதே போல புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் அஞ்சலி செலுத்திய போது ஒ.பி.எஸ் அணிக்கும் எடப்பாடி அணிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சமாதானம் செய்யப்பட்டதால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது.
 
இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அலுவலகத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
  
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்