Skip to main content

இருண்டது தமிழகம்!  தென் மாவட்ட நாடித்துடிப்பு!

Published on 08/08/2018 | Edited on 27/08/2018
n

 

தமிழுக்கும் தமிழ் மண்ணிற்கும் தமிழர்களுக்கும் உதிரமாயிருந்த உன்னதத் தலைவர் கலைஞர், விடை கொடுதாயே என்று பயணம் புறப்பட்டு விட்டார். தேசமே கதறுகிறது. தமிழகம் இருண்டு போய்க் கிடக்கிறது.

 

கடையை அடையுங்கள், பேருந்தை இயக்காதே. தொழிலை நிறுத்து என்ற ஆவேசக்குரலோடு எந்த ஒரு கரை வேட்டியோ மனிதரோ வரவில்லை. கலைஞர் காலமானார் என்ற தகவல் மின்னலாய் பாய்ந்த நேரத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடைகள் தானாகவே அடைபட்டன. பேருந்துகள் முடங்கின. பெட்டிக் கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பூட்டுக்கள் தொங்கின. இருபதாயிரம் விசைத் தறிகளைக் கொண்ட லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்களிருக்கும் நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவின் தொழில் நகரம் ஸ்தம்பித்தது.

 

p

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்ட துக்கத்தையே மக்களின் முகத்தில் காண முடிந்தது. அத்தனை இறுக்கம். மாவட்டங்களில் ஊசி முனை அளவு கூட அசம்பாவிதம் நடந்ததாகத் தகவலுமில்லை. அனைத்தும் இயல்பாகவே நடந்தது.

 கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கு. மறியல்.

 தென்மாவட்டமே ஒசையின்றி இருந்த கணத்தில் அந்த இரவில் பத்தரைமணி வாக்கில் நெல்லை மாவட்டத்தின் தென்காசி நகரில் தி.மு.க. ந.செ. சாதிர் தலைமையில் திரண்ட உடன்பிறப்புக்கள், ஐந்து முறை முதல்வராயிருந்தவர் அவரால் பலனடைந்த பிரிவினர் ஏராளம், அவருக்கு மெரினாவில் ஆறடி இடத்தை ஒதுக்குங்கள் என்ற கோரிக்கையோடு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை நகர போலீசார் கைது செய்தார்கள்.

k

 கற்கும் மாணவனாய் உள்ளே செல்கிறேன்.

 1949ல் அண்ணா, கழகம் தொடங்கிய நேரத்தில் கலைஞரை தூத்துக்குடிக்கு அனுப்பி அங்கே கழகத்தைத் தொடங்கி வைக்கச் சொன்னார். கே.வி.கே. சாமியை மா.செ. பொறுப்பில் வைத்த கலைஞர் அங்கே கழகத்தைத் தொடங்கி வைத்தார். 1949 களிலிருந்தே திராவிட பாரம்பரியத்தில் ஊறி வந்த குடும்பமான தூத்துக்குடியின் தங்கராஜ் நாடார், கலைஞரின் மீதான ஈர்ப்பு காரணமாகக் கருவிலேயே தன் மகனுக்கு கருணாநிதி என்று பெயரிட்டார். மாப்பிள்ளை என்று சொல்லி ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் அது துள்ளுமாம். போலவே, பெயருக்கேற்றவாறு இலக்கியத்திலும், அரசியல் மேடைப் பேச்சிலும் கலக்கி வரும் கருணாநிதி, 67 முறை கலைஞரைச் சந்தித்துப் பேசியவர்.

1951ல் தேர்தலில் ஜெயித்த புதிய எம்.எல்.ஏ.க்கள். அப்போது தான் சட்டசபைக்குள் வந்து கொண்டிருந்தார்கள். அது சமயம் பத்திரிகையாளர்கள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எத்தகைய உணர்வுடன் சட்டசபைக்கு வருகிறீர்கள் என்று கேட்டதற்கு கன்னா, பின்னா வென்று தங்கள் மனதுக்கு எட்டியதைச் சொன்னர்கள்.

 

குளித்தலைத் தொகுதியிலிருந்து ஜெயித்து முதன் முதலாக எம்.எல்.ஏ.வாக வந்த கலைஞரிடமும் அதே கேள்வியை பத்திரிகையாளர்கள் முன்வைக்க,

கற்கும் மாணவனாய் உள்ளே செல்கிறேன். கற்பிக்கும் ஆசிரியராய் வெளியே வருவேன் என பிசிரில்லாமல், பற்ற வைத்த வெடி போன்ற பதிலாய் வந்ததைக் கேட்ட பத்திரிகையாளர்களின் புருவங்கள் உயர்ந்தன.

அ.தி.மு.க.வின் டாப் லெவல் பேச்சாளரான அந்த கருணாநிதி, தற்போது அ.தி.மு.க.விலிருந்தாலும், கலைஞரின் பிரிவு தாளாமல், இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிச் சொல்லிச் சொல்லிக் கதறுகிறார்.

 

தாள மாட்டாத மரணங்கள்

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அருகிலுள்ள பிச்சத்தலைவன் பட்டிக் கிராமத்தின் கோயில் பிள்ளை கலைஞரின் மீதான பற்றுதலால் தன் மகனுக்குக் கருணாநிதி என்று பெயர் சூட்டிய முதியவர். வயதான காலத்தில் கிராமத்தில் வைத்திருக்கும் பெட்டிக் கடை வருமானத்தில் அவரும் அவருடைய மனைவியும் வயிற்றைக் கழுவியவர்கள். டீக்குடிப்பதற்காக கிராமத்தின் கடைக்குப் போனவர், அங்குள்ள டி.வி.யில் கலைஞரின் உடல் நலத்தில் பின்னடைவு என ப்ளாஷ் ஒட, தாங்கமாட்டாமல் தன் மார்பைப் பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தவரின் மூச்சு, அங்கேயே அடங்கியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம், கான்சரபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் தி.மு.க.வின் கி.க. செ. காவேரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கலைஞரின் உடல் நிலைக் குறைவைப் பொறுக்க மாட்டாமல் கவலையோடிருந்தவர், தாங்க முடியாத சோகத்தால் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தின் சுரண்டைப் பக்கமுள்ள, வீ.கே.புதூரைச் சேர்ந்த பிச்சையாவுக்கு 80 வயது. தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர். 1977ல் கலைஞர் அந்தக் கிராமத்தில் தி.மு.க.வின் கொடியை ஏற்றியபோது கொடிக்கம்பம் முறிந்து விழுந்ததில் பிச்சையாவின் இரண்டு விரல்கள் துண்டானது. சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு அவரைப் பார்த்து நலம் விசாரித்த கலைஞர் அவருக்கு ஐநூறு ரூபாய் நிதி உதவியும் செய்திருக்கிறார்.

காவேரி மருத்துவமனையில் கலைஞர் ஒரு வாரமாக தீவிர சிசிச்சைப் பிரிவிலிருந்த செய்தி பிச்சையாவை மிகவும் பாதித்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் மயக்க மடைந்த அவரை, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள் ஆனாலும் கவலையில், அவரது உயிர் அங்கேயே பிரிந்திருக்கிறது.

கலைஞரின் பிரிவு, தமிழகத்தின் உயிர்த்துடிப்பையே அசைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரவுடிகளின் அட்ராசிட்டி; தொழிலாளி வெட்டிக் கொலை - ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
shoot on rowdy in nellai
சந்துரு- பேச்சித்துரை

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதி அருகே உள்ளது தென்திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவரின் மகன் 23 வயதேயான பேச்சித்துரை. நேற்றைய தினம் மாலை பேச்சித்துரையும், தன் நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன் கஞ்சாவையும் சேர்த்தடித்தவர்களுக்குப் போதை உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது.

போதையில் கண்மண் தெரியாமல் சாலையில் சென்ற பேச்சிதுரையும், சந்துருவும் வீரவநல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பின்பு நெல்லை - அம்பை நெடுஞ்சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில், பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் வம்பிற்கு இழுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பேசி வீண் தகராறு செய்தவர்கள் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைக்க காரில் வந்தவர்கள் அலறித் தப்பியிருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

பின்பு மறுபடியும் பாலக்கட்டுமானப் பக்கம் சென்றவர்கள் மீண்டும் தொழிலாளர்களிடம் வம்புத் தகராறு செய்ய, அங்கு பணியிலிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவர்களைக் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும் சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமியின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ ரத்தம் பீறிட கதறி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுச்சம்பவம் நடக்கும்போதே அதனைத் தடுக்கப் பாய்ந்த சக தொழிலாளருமான மூலச்சி கிராமத்தின் வெங்கடேஷ் என்பவரை அரிவாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.

வெள்ளாங்குழி வழியாகச் சென்ற இருவரும் எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாட்கள் முனையில் நிறுத்தியவர்கள் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றுள்ளனர். அப்போது மிரண்டு போன பயணிகளில் சிலர் சுதாரித்துக் கொண்டு அதனைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரை இரண்டு பேர்களும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாட்களால் ஓங்கிய படியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். மாலை நேரம் அந்தச் சாலையே இதனால் பதட்டமாகியிருக்கிறது. ஆனாலும் வெறியில்  கத்தியபடியே இருவரும் தாமிரபரணி ஆற்றுக்கரையை நோக்கிப் போன தகவல் வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, தாமதம் செய்யாமல் காவலர் செந்தில்குமாரும், மற்றொரு காவலரும் பைக்கில் அவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர்.

ஆற்றாங்கரையோரம் அவர்களை போலீசார் இருவரும் மடக்கிபிடிக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத வகையில், இருவரும் மூர்க்கத்தனமாக காவலர் செந்தில்குமாரை மடக்கி அரிவாளால் அவரின் கையை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். சக காவலர் உட்பட சிலர் காயமடைந்த காவலர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

காவலர் வெட்டப்பட்டது ரவுடிகளின் அட்டகாசம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனுக்குத் தெரியவர உடனடியாக அவர் தன்னுடைய தனிப்படையை அனுப்பியிருக்கிறார்.

தாமிரபரணிக் கரையில் பதுங்கிய அவர்களை தனிப்படையினர் தேடி சலித்தெடுத்ததில் அவர்கள் முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத் தோப்பில் பதுங்கியிருந்தது தெரியவர அவர்களை தனிப்படை ரவுண்ட்அப் செய்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். விடாமல் துரத்திய தனிப்படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடியிருக்கிறான். ரவுடி பேச்சித்துரையை மீட்ட போலீசார் முக்கூடலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருடைய காலில் உள்ள குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பேச்சித்துரையை அனுப்பிவைத்திருக்கின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசன். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள் கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீ பத்மநல்லூர் பக்கம் பொது மக்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள் தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவைக் கைது செய்திருக்கிறோம் என்றார் எஸ்.பி.

shoot on rowdy in nellai

இளவயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கி விட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி மூளையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமாம். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி, சதைகளில் போதை ஏறி சைக்கோவாகவே மாறிவிடுவானாம் இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் போய்விடுமாம். அந்த லெவலுக்குப் போனவன் வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது அடிதடி என்றாகி கொலை வரை போயிருக்கிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்காகி காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம் பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி அரசு விருந்தாளியாகப் போய்வரும் ரவுடி பேச்சிதுரையின் மீது குண்டாசும் பாய்ந்திருக்கிறது என்கிறார் அந்தப் பகுதியின் மூத்த காவலர் ஒருவர்.

ரவுடி பேச்சித்துரையைப் போன்று இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள்.

Next Story

நெல்லையில் பரபரப்பு; பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
DMK councilors boycotted Nellai Corporation's budget meeting

நெல்லை மாநகராட்சியின் பட்ஜெட், மற்றும் சாதாரண அவசரக் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் பிப் 28 காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பிரதமர் மோடி நெல்லை வருகையின் காரணமாக பட்ஜெட் கூட்டம் மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாலை குறிப்பிட்ட நேரத்தில் நெல்லை மாநகராட்சி மன்ற அரங்கத்திற்கு மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, கமிசனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரில் 2 வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி தன் கைகுழந்தையுடன் வந்திருந்தார். தி.மு.க. கவுன்சிலர்கள் நான்கு பேர், காங்., கம்யூ கட்சிகளின் கவுன்சிலர்கள் என 55 கவுன்சிலர்களில் 9 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்

மாலை நான்கு மணி கடந்தும் போதிய கவுன்சிலர்கள் ஆஜராகாததால், அரங்கத்திற்கு வந்த மேயர் சரவணன் பட்ஜெட் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கவுன்சிலர் சந்திரசேகர் மாலை 6 மணி ஆகியும் கூட்டம் தொடங்கவில்லை, தி.மு.க.கவுன்சிலர்கள் வராமல் புறக்கணித்து விட்டார்கள். மக்களின் பிரச்சினைகள், வார்டு பணிகள் பற்றிப் பேச தி.மு.க.கவுன்சிலர்கள் வராதது கண்டிக்கத்தக்கது. மக்களுக்கான பணிகள் முடங்கியுள்ளன என்றார், ஆவேசமாக.

DMK councilors boycotted Nellai Corporation's budget meeting

இதனால் மாமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்களுக்கிடையேயான மோதலின் விளைவுதான் மாமன்றக் கூட்டம் முடங்குமளவுக்குப் போனது. அரசு தலையிட்டு இந்த விவகாரத்திற்கான தீர்வு காண்பது அவசியம். இது நடக்காத பட்சத்தில் மாமன்றத்தின் செயல்பாடுகளும், மக்கள் பணிகளும் கேள்விக்கிடமாகி விடும். மாநகரமே பாதிக்கப்படும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

தி.மு.க. கவுன்சிலர்களில் சிலரிடம் பேசிய போது, புயல் வெள்ளத்தால் நெல்லையில் பெரும்பாலான வார்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை மேம்படுத்த மேயரின் கவனத்திற்கு கோரிக்கை வைத்தும் அவர் தனக்கு ஆதாயமான வார்டுகளையே கவனிக்கிறார். பிற வார்டுகளைப் புறக்கணிக்கிறார். மேயரின் இத்தகைய போக்கினால் தான் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்தோம் என்கிறார்கள்.