கோவையில் விட்டு விட்டு மழை
கோவை மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் இருந்து வந்த சூழலில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து மாவட்ட முழுவதும் இதமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மழையின் காரணமாக கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
அருள்