Skip to main content

தமிழக- கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Intensive vehicle check on Tamilnadu-Kerala border!

 

கேரளா மற்றும் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரு மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை அடுத்து, கேரளாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. 

 

இந்த நிலையில், தமிழக- கேரள எல்லைப் பகுதியில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.     

 

சார்ந்த செய்திகள்