Skip to main content

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர் விரட்டியடிப்பு

Published on 24/09/2017 | Edited on 24/09/2017
வேதாரண்யம் அருகே தமிழக மீனவர் விரட்டியடிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுதுறையில் இருந்து நேற்று முன்தினம் 50 பைபர் படகுகளில் 200 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் அனைவரும் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் யாரும் மீன்பிடிக்க கூடாது என கூறி, 2 படகில் இருந்த 8 மீனவர்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கினர். அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். உயிருக்கு பயந்த மீனவர்கள் அவசர அவசரமாக நேற்று கரைக்கு திரும்பினர். இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்