Skip to main content

காதலியின் அழைப்பின்பேரில் சந்திக்க சென்ற இளைஞர் கொலை... கரூரில் பரபரப்பு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

karur incident

 

கரூரில்  இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் நடுரோட்டிலேயே வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகரன். 23 வயதாகும் ஹரிகரன், அந்தப்பகுதில் சலூன் கடையொன்றை நடத்தி வருகிறார். அதேபகுதியில் உள்ள வேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, ஹரிகரன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கரூரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு காதலி, ஹரிகரனை சந்திக்க அழைத்துள்ளார். காதலியின் அழைப்பின்பேரில் அங்கு சென்ற ஹரிகரன் காதலியுடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள், ஹரிகரனை கத்தியில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஹரிகரன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

 

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை முதல்கட்டமாக கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்