Skip to main content

மூதாட்டியைக் கொன்று பொங்கல் பரிசு கொள்ளை!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

incident cuddalore

 

கடலூரில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து, பொங்கல் பரிசுத் தொகை 2,500 ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வீடு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், மூதாட்டி பச்சையம்மாளை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேவீட்டில் இருந்த மற்றொரு மூதாட்டியையும் கொள்ளையர்கள் தாக்கியதில், மூதாட்டி 'தாயார்' என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகைக்காக மூதாட்டி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்