Skip to main content

கோவையில் தொழிலாளிகளின் கண்முன்னே முதலாளியை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

இரண்டு லட்சம் ரூபாய் பணம், அவர் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகள் மற்றும்  மூன்று கார்களை திருடிக்கொண்டு, கண்காணிக்காப்புக் கேமிரா காட்சிகளையும் அழித்துவிட்டு சென்ற  ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசித்தேடி வருகின்றனர்.

 

murder

 

கோவை பீளமேடு பகுதியைச்சேரந்தவர் பரந்தாமன்(36). கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை வைத்து நடத்துவபவரான இவர் கார்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (18-04-2019) காலை பாப்பநாயக்கன் பாளைத்திலுள்ள வாக்குசாவடியில் வாக்களித்து விட்டு தனக்கு சொந்தமான  போத்தனூர் பகுதியல் இயங்கி வரும் தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
 

சுமார் 11 மணி அளவில் பரந்தாமன் அலுவலகத்திலும், ஒரு பெண் தொழிலாளி மற்றும் இரு ஆண் தொழிலாளர்களும் வழக்கம் போல்  வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.
 

காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களின் கழுத்தில் கத்தியை வைக்கவே தொழிலாளர்கள் பயத்தில் ஒரு அறையினுள் ஓட்டம் பிடித்தனர்.
 

அந்த அறையின் கதவை மூடிய கும்பல் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டிருந்த பரந்தாதமனை சுற்றி வலைத்து தொழிலாளர்களின் கண்முன்னே அவர்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில்  பரந்தாமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். அங்கிருந்த இரண்டு லட்சம் ரூபாய் பரந்தாமன் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அழித்துவிட்டு அங்கு  நிறுத்தப்பட்டிருந்த மூன்று  கார்களையும் ஓட்டிக்கொண்டு தப்பி சென்றனர்.
 


இதனையடுத்து தொழிலாளர்களின் அலரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடரந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போத்தனூர் காவல் துறையினர் மற்றும் மாநகர துணை காவல் ஆணையர்  கொலையான பரந்தாமனின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வரும் போலீசார் கொலைக்கு முன்விரோதம் காரணமாக? அல்லது தொழில்போட்டியா? கொடுங்கல் வாங்கல் பிரச்சனையா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மேலும் மாவட்ட உதவி கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் கோவையில் தொழிலாளிகளின் கண்முன்னே முதலாளியை வெட்டி கொலை செய்து விட்டு மூன்று கார்களை கொள்ளைஅடித்த சம்பவம் பெரும் அதிரச்சியையும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.