Skip to main content

கல்லூரி வளாகத்தில் முன்னாள் பேராசிரியை தற்கொலை 

Published on 18/12/2019 | Edited on 19/12/2019

சென்னையில் கல்லூரியின் முதல் தளத்தில் முன்னாள் கல்லூரி பேராசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hh

 


சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் முதல் தளத்தில் அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியை தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னாள் பேராசிரியை தனலட்சுமி 5 ஆண்டுகளுக்கு முன்பு அக்கல்லூரியில் பணியாற்றியவர்  ஆவார்.  கல்லூரியின் முதல்தளத்தில் உள்ள அறையில் முன்னாள் பேராசிரியை தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்