Skip to main content

காதல் கணவனின் கொடுஞ்சொல்! குழந்தைக்கே எமனான தாய்!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

பள்ளியில் படிக்கும்போதே காதலித்தார்கள்; எல்லைமீறிப் பழகினார்கள். அதனால், அவள் கர்ப்பமானாள். வயிறு வீங்கியதைக் கவனித்த பள்ளி ஆசிரியர்கள். தந்தையை வரவழைத்து ‘இந்த ஒழுங்கீனத்தை அனுமதிக்க முடியாது..’ என்று மாற்றுச் சான்றிழைக் கையில் திணித்து வீட்டுக்கு அனுப்பியது பள்ளி. இதற்கு காரணமானவரே தாலி கட்ட வேண்டும் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்து, காதலித்தவனையே கரம் பற்றினாள்.

 

incident in aruppukottai... police investigation


காதல் அரும்பி ‘குடும்பம்’ நடத்திய வயதைச் சட்டம் அனுமதிக்காதுதான். ஆனாலும், குழந்தை பெற்று திருமணம்தான் சுமுகமாக நடந்துவிட்டதே! காதல் வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழ வேண்டியதுதானே! அதுதான் நடக்கவில்லை. ‘குழந்தைக்கு நான் அப்பா இல்லை’ என்று சந்தேகத் தீயைக் கொளுத்திப் போட்டான், கணவன். எந்நேரமும் சண்டை போட்டால் வாழ்க்கை நரகம்தானே! அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் தொடங்கி, மதுரை சரக டி.ஐ.ஜி. வரைக்கும் விவகாரம் சென்று, விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சமரசம் செய்து வைத்தும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கணவனும் மனைவியும் ரத்த சொந்தங்களுடன் ஆலோசித்து ஒரு முடிவெடுத்தார்கள். அந்த படுபாதகச் செயல், கணவன் அமல்ராஜ், மனைவி மோகனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) , கணவனின் பெற்றோர் மரிய லூகாஸ் – விமலா, மோகனாவின் தந்தை சூசை மாணிக்கம் என 5 பேரை கம்பி எண்ண வைத்திருக்கிறது.

கருவை 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து பிரசவித்து, 11 மாதங்கள் வரை வளர்த்த மகன் விகாஸை, தந்தை அமல்ராஜ் வற்புறுத்தியதால், வாளித் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலையே செய்துவிட்டாள் மோகனா. இனியொரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்ற சுயநலத்தால்தான்,  பெற்றோராலேயே குழந்தை விகாஸ் கொல்லப்பட்டிருக்கிறான்.  மோகனாவின் தந்தை சூசை மாணிக்கத்துக்கும், அமல்ராஜுவின் பெற்றோருக்கும் தெரிந்தே கொலை நடந்திருக்கிறது. . குழந்தை தவறி தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டது என்று அமல்ராஜுவும் மோகனாவும் நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது. சம்பந்தப்பட்ட ஐவருமே கைதாகியுள்ளனர்.

‘பள்ளியில் படிக்கும்போதே காதலித்தவளாயிற்றே! உனக்கு நான் மட்டுமா காதலன்? நீ கர்ப்பமானதற்கு நானா காரணம்?’ என்றெல்லாம் வார்த்தைகளால் அமல்ராஜ் தினமும் வறுத்தெடுத்ததால், குழந்தை விகாஸ் மீது வெறுப்பு ஏற்பட்டு, கொலை செய்யவும் சம்மதித்திருக்கிறாள், மோகனா. 

குழந்தைக்கு அம்மாதானே உலகம்! அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்கிறார்களே! உண்மைக் காதல் இல்லையென்பதால், ஒரு தாயின் மகத்துவத்தை, மோகனா  உணர்ந்திருக்கவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.