Skip to main content

கணவனுடன் சேர்த்து வைக்க லட்சக்கணக்கில் லஞ்சம்... பெண்ணை ஏமாற்றிய அதிகாரி மீது ஐ.ஜி அதிரடி நடவடிக்கை!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

Impossible action of a woman ... IG announces order

 

மலைவாழ் குறவர் சமூக பெண்ணிடம் கணவரை சேர்த்து வைப்பதாகக் கூறி 95 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் உதவியாளரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளார் திருச்சி சரக ஐ.ஜி. 

 

நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்தவர் உமா, மலைவாழ் குறவர் சமுகத்தைச் சேர்ந்த அந்த பெண், பிரிந்திருக்கும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும் என நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளரான வேம்பு, "உன்னோட புருஷன் இப்ப எங்க இருக்காருன்னு தெரியும். எங்க இருந்தாலும் தூக்கிவந்து சேர்த்து வைக்கவேண்டியது என்னோட கடமை" என நம்பிக்கையோடு பேசி உமாவிடம் நெருக்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக உமாவிடம் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார்.

 

மூன்று மாதங்களாகியும் தனது கணவரைச் சேர்த்து வைக்காமல் லஞ்சமாக பணத்தை மட்டுமே வாங்குவதை நினைத்து வேதனை அடைந்து, இதற்கு முடிவுகட்ட நினைத்தார் உமா. இனிமேல் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என நினைத்து எஸ்.ஐ பணம் கேட்கட்டும் அதனைத் தனது செல்போனில் பதிவு செய்து காவல் உயரதிகாரிகளுக்குப் புகாராக அளித்துவிடலாம் எனத் திட்டமிட்டார். உமாவின் கணக்குப்படியே எஸ்.ஐ. வேம்பு பணம் கேட்டுள்ளார். அதனை அப்படியே ரெக்கார்ட் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் உமா. அந்த புகாரை விசாரித்த திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், லஞ்சம் பெற்ற நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேம்புவை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

 

“மலைவாழ் குறவர் சமுதாயத்து மக்கள் சமீப காலமாக எந்தவித தொழிலும் நிரந்தரமாக இல்லாமல், தினசரி உணவுக்கே இரைதேடி ஓடும் பறவைகளைப்போல ஊர், ஊராகப் போகின்றனர். அவர்களிடம் மனசாட்சியே இல்லாமல் இரண்டு லட்சத்திற்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றிய காவலரை பணியிடை நீக்கம் செய்ததோடு மட்டுமில்லாமல் சிறையில் தள்ளியிருக்கனும், ஆனாலும் அந்த பெண்ணின் துணிச்சல் ரொம்பவே பாராட்டுக்குரியது” என்கிறார்கள் நாகை பகுதி சமுக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.