Skip to main content

‘மோசடி கும்பலைக் கண்டால் சைபர் கிரைமிற்குத் தகவல் கொடுக்க வேண்டும்’ - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

‘If you find a fraudulent gang, you should report it to the Cyber Crime’-District Superintendent of Police

 

தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி பணத்தை அபகரிக்கும் கும்பல் இன்றளவிலும் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு மக்களை ஏமாற்றுவதால் ஏமாற்றம் அடைபவர்கள் இவர்களை நம்பி பணத்தை இழந்துவிடுகின்றனர். இதனைத் தடுக்க அந்தந்த மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துவது வழக்கம்.

 

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் இருப்பதற்கு முக்கிய அறிவுரைகளும் பிரத்யேக தொலைப்பேசி எண்ணையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். அதன்படி, "திருச்சியில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் விலை குறைவான குக்கர், இண்டெக்ஷன் ஸ்டவ், சோப்பு, தோசை தவா, கடாய், பணியாரச் சட்டி, சிறிய குத்து விளக்கு, சமையலறைப் பொருட்கள் விற்பதாகக் கூறிக்கொண்டு உங்கள் பகுதிகளில் புதிய நபர்கள் யாரேனும் வருவார்கள். அவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து பொருட்களை விற்பனை செய்வர்.

 

அதன் பின்னர் உங்களின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு பரிசு கூப்பன் ஒன்று கொடுத்துச் செல்வார்கள்.  பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுக்கு ஸ்கூட்டி மற்றும் தங்க நாணயம் பரிசு விழுந்ததாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அதைப் பெறுவதற்கு GST மற்றும் வரி மட்டும் செலுத்த வேண்டும் என்று போன் செய்து உங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்ற நூதன முறையில் மோசடி செய்யும் நபர்களை உங்கள் பகுதியில் கண்டால் உடனே கீழே உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளரின் தொலைபேசி 9498156464 / 9443651660 எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்" என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.