தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசு பணிக்கு மாற்றம்
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட இணை செயலாளரும், மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய கமிஷனருமான ஆஷிஸ் குமார் மத்திய அரசு பணிக்கு செல்கிறார். அதாவது, அவர் வடகிழக்கு மண்டலத்துக்கான வளர்ச்சி துறை இணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.