Skip to main content

நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி



அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் 4 பேர் தடையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் ஒருவர். ஆனால் இதை கே.பி.முனுசாமி மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எங்களது முக்கியமான கோரிக்கை சசிகலா குடும்பத்தை முற்றிலும் வெளியேற்றுவதுதான். தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேற்றப்படவில்லை என்றால் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை. தர்மயுத்ததின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தை முழுமையாக வெளியேற்றுவதுதான். சசிகலா நீக்கப்படும் வரை இணைப்புக்கான சாத்தியம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. ஓ.பி.எஸ். தலைமையில் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். தொண்டர்கள், நிர்வாகிகள் பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக நாங்கள் கட்டுப்படுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

படம்: செண்பகபாண்டியன்

சார்ந்த செய்திகள்