Skip to main content

தண்ணீர் கேட்டு பேசிய வார்டு உறுப்பினரை அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்! 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
The husband of the Panchayat Council Chairman slandered the ward member who asked for water!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வராததால் 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கே பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது தொலைப்பேசியை எடுத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவின் கணவர் சரவணனிடம், 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தன் வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு சரவணன் இதெல்லாம் பிரச்சனைன்னு இன்னொரு முறை பேசன.. என அவதூறாக பேசியதாக கூறுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 8வது வார்டு உறுப்பினர் இளமதி ஆகியோர் கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சரவணனை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவுக்கு பதிலாக அவருடைய கணவர் செயல்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர். 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் பேசியதால் தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.‌

சார்ந்த செய்திகள்

Next Story

மாயமான சிறுமி! போலீஸ் அலட்சியத்தால் தந்தை விபரீத முடிவு 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக  காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவி கண்முன்னே கணவன் கொடூரக்கொலை

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Husband passed away in front of wife in Jolarpet

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான கோவிந்தராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கின்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை. நேற்று காலை கோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மர்மமான முறையில் உடம்பில், தலையில் காயங்களோடு இறந்து கிடந்தார். 

 

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கொலை குறித்த காரணம் மற்றும் கொலையாளி யார் என விசாரணை செய்தனர். வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன். திருமணத்தை மீறீய உறவால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மனைவி ஈஸ்வரியை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்,  அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கும் கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜனுடைய மனைவி ஈஸ்வரிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

 

ஓராண்டுக்கு முன்பு தனது கணவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு கோவிந்தசாமி உடன் ஊரை விட்டு ஓடி உள்ளார் ஈஸ்வரி. மனைவி காணாமல் போனதாக ஏலகிரி போலீசில் கோவிந்தராஜ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இருவரையும் தேடி கண்டுபிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்பின் கணவர் கோவிந்தராஜுடன் குடும்பம் நடத்தினாலும், மற்றொருபுறம் கோவிந்தசாமி உடனான திருமணத்தை மீறிய உறவை கை விடாமல் தொடர்ந்து வந்துள்ளார் ஈஸ்வரி. இதனால் கணவன் கோவிந்தராஜுக்கும் மனைவி ஈஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நவம்பர் நான்காம் தேதி நள்ளிரவு, ஈஸ்வரியும் கோவிந்தசாமியும் அருகிலிருந்த விவசாய நிலத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் தனிமையில் இருந்துள்ளனர். நள்ளிரவு வீட்டுக்குள் மனைவி இல்லையே என சந்தேகப்பட்டு தேடிய கணவர் கோவிந்தராஜ், மாட்டு கொட்டையில் இருவரும் இருப்பதை பார்த்து ஆத்திரமாகி அப்போதே சண்டை போட்டுள்ளார்.

 

எங்க சந்தோஷத்தை கெடுப்பதே நீதான் என அப்பொழுது அங்கிருந்த மண்வெட்டியை எடுத்த கோவிந்தசாமி, ஈஸ்வரி கண் முன்பே அவரது கணவர் கோவிந்தராஜை அடித்து கொலை செய்துள்ளார். அடித்து கொலை செய்துவிட்டு இருவரும் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

 

கோபால் என்கிற விவசாயி தனது நிலத்துக்கு வந்தபோது மாட்டு கொட்டகை வெளியே கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதே பார்த்துள்ளார், பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். அப்போது வீட்டிலிருந்து சாவகாசமாக கிளம்பி வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணவரை பார்த்து கண்ணீர் விட்டு அழுவது போல் டிராமா செய்துள்ளார் ஈஸ்வரி.  ஈஸ்வரியின் வாக்குமூலத்தை தொடர்ந்து ஏலகிரி போலீசார், அதே ஊரில் இருந்த கோவிந்தசாமியை கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.