Skip to main content

மனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..! நினைத்ததை சாதித்துவிட்டாள் அனிதா..!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
anthony

                                                                                       அந்தோனி


கடந்த செப்.12-ந்தேதி மாலையும் கழுத்துமாய் நின்றிருந்தான் கதிரவன். இன்றும் அவன் கழுத்தில் மாலைகள். ஆனால் உடம்பில் உயிர்தான் இல்லை. யார் இந்த கதிரவன்? மனைவியின் சதியறியாது பிணமாகிப் போனவன்.! 

அருப்புக்கோட்டையை சேர்ந்த கதிரவனுக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த விஜயசுந்தரம் என்பவரது மகள் வினோதினி (எ) அனிதாவுக்கும் செப். 12-ல் திருமணம் முடிந்தது.  கதிரவன் தரமணி டிசிஎஸ்-ல் வேலை பார்ப்பவர் என்பதால், திருமணத்திற்கு புது மனைவியோடு பல்லாவரத்திற்கு குடிவந்தார். அந்த மகிழ்வான வாழ்க்கை ஒருமாதம் கூட நினைக்கவில்லை. 
 

கடந்த 13-ந் தேதி திருவான்மியூர் கடற்கரைக்கு கணவனை அழைத்து வந்த வினோதினி, முன் கூட்டியே தனது கல்லூரி காதலன் அந்தோனிக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே வகுத்த திட்டப்படி, கதிரவன் கண்ணில் துணியை கட்டிக் கொண்டு வினோதினி கண்ணாமூச்சி விளையாட்டு ஆட, கண்ணிமைக்கும் நேரத்தில் கதிரவனின் பின் தலையில் சுத்தியாலும், கத்தியாலும் தாக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான் அந்தோனி. பின்னர் வழிப்பறிக் கொள்ளையர்கள் தமது கணவனை தாக்கிவிட்டு, தனது 12 சவரன் நகையை பறித்து சென்றுவிட்டதாக நாடகம் ஆடினாள் வினோதினி. ஆனால், போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், உண்மை வெளிவந்துவிட்டது. 
 

   சத்தமில்லாமல் சம்பவத்தை முடித்த அந்தோனி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பதுங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்கிவிட்டான். "ஏற்கனவே கொடைக்கானலுக்கு அவர்கள் தேனிலவுக்கு சென்றபோது ஸ்கெட்ச் போட்டேன், ஆனா தோல்வியில் முடிச்சிருச்சு. இப்ப இது 2வது முயற்சி என்று சொல்லி"  போலீஸாரையே மிரள வைத்திருக்கிறான். 2 நாள் மருத்துவ சிகிச்சையில் கண்விழிக்காமல் இருந்த கதிரவன், இப்போது நிரந்தரமாக கண் மூடிவிட்டான். அந்தோனிக்கும் வினோதினிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது, பெண் வீட்டாருக்கு தெரிந்திருக்கிறது. இருந்தாலும் சாதி குறுக்கே நின்றதால், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒரு மாப்பிள்ளைக்கு கட்டிவைத்தனர். 
 

இப்போது ஏதுமறியா அப்பாவி, பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். காதலை விட கள்ளக் காதலுக்கு வீரியம் அதிகம் என்பதை உணர்த்தி விட்டாள் வினோதினி. அதேபோல், அவள் நினைத்தையும் சாதித்துவிட்டாள். ஆம், கணவனை கொல்ல நினைத்தாள், அது நிறைவேறி விட்டது. அடுத்து.....?

 

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.