Skip to main content

மனைவியின் தகாத செயலை கண்டித்த கணவன்... ஆக்ரோஷத்தில் ஆயுதத்துடன் களமிறங்கிய காதலன்!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

asdas

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகில் உள்ளது எழுமேடு அகரம். இந்த பகுதியை சேர்ந்தவர் இருபத்தி ஆறு வயது லாரி டிரைவர் வடிவேல். இவருக்கு திருமணமாகி மனைவி மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வடிவேல் தனது தொழில் சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களுக்கு லாரி ஓட்டி சென்று சம்பாதித்து மனைவி பிள்ளைகளை காப்பாற்றி உள்ளார். இதன் காரணமாக அவர் பல நேரங்களில் வீட்டில் இருப்பதில்லை. கணவர் இல்லாத காரணத்தினால் மல்லிகா அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்று வருவது வழக்கம். அப்படி சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 22 வயது சசிகுமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

 

மல்லிகா சசிகுமாருடன் அடிக்கடி வெளியே சென்று தங்களது உறவை வளர்த்து வந்துள்ளனர். சசிகுமார் புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் மல்லிகா சசிகுமார் இருவருக்குமான உறவு அவரது கணவன் வடிவேலுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து வடிவேல், இருவரின் தகாத உறவு முறையை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் வடிவேலு மீது சசிகுமாருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காதலுக்கு வில்லனாக எதிர்த்து வரும் வடிவேலு மீது சசிகுமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

 

இதையடுத்து வடிவேலுவை தீர்த்துக் கட்டிவிட்டால் தங்கள் காதல் எந்தவித இடையூறுமின்றி தொடரும் என்று முடிவு செய்தார் சசிகுமார். சம்பவத்தன்று தனது நண்பரான கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த சிவனேசன் என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவர்கள் திட்டமிட்டபடி சிவனேசன்  நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி சென்றுள்ளார். பின்னர் ஓட்டலில் வேலை செய்துகொண்டிருந்த சசிகுமார் குறிப்பிட்ட நேரம் மட்டும் வெளியே சென்று வருவதற்கு ஓட்டல் உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்படி அனுமதி பெற்று வெளியே வந்த சசிகுமாரும் சிவனேசனும் சேர்ந்து நெல்லிக்குப்பம் வந்தனர்.

 

வாழப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே சாலை வழியாக வடிவேலு வருவார் என்பதை அறிந்து மறைந்திருந்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி வடிவேல் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். அவரை வழிமறித்து தடுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு சசிகுமார், சிவனேசன் ஆகிய இருவரும் தப்பித்தனர். அதன்பின்னர் சசிகுமாரும் புதுச்சேரி ஹோட்டலுக்கு எதுவும் நடவாதது போல் வேலைக்கு சென்று விட்டார். பலத்த காயமடைந்த வடிவேலுவை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார் வடிவேலு.

 

dsd

 

இதுகுறித்து வடிவேலுவின் தாயார் தமிழரசி அளித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து வடிவேலுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரித்த போது சசிகுமார் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து தன்னை அரிவாளால் தாக்கி கத்தியால் குத்தியதை வடிவேலு  தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் புதுச்சேரி ஓட்டலுக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர்கள் சம்பவத்தன்று சசிகுமார் ஹோட்டல் முதலாளியிடம் அனுமதி பெற்று வெளியே சென்று வந்ததை உறுதி செய்தனர்.

 

சிறிது நேரத்தில் அங்கு வேலைக்கு வந்த சசிகுமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வடிவேலுவை அரிவாளால் வெட்டியதை சசிகுமார் ஒப்புக்கொண்டார். பின்னர் சசிகுமாரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வடிவேலுவை கொலைசெய்யும் முயற்சியில் சசிகுமாருக்கு துணையாக இருந்த அவரது நண்பர் சிவனேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.