Skip to main content

மரித்துப் போன மனிதநேயம்... நாயை அடித்தே கொன்ற கொடூரர்கள்!

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

 humanity gone ... the savages who beat the dog

 

வாயில்லா ஜீவனும் உயிரினம் தானே என்று கருதவில்லை. விலங்குகளில் நன்றியுள்ள பிராணி என்றால் நமது நினைவுக்கு நொடியில் எட்டுவது நாய். உரிய நேரத்தில், வீட்டுக்கு வரும் கொள்ளையர்களைக் கண்டதும் உஷாராகி தன் எஜமானரை எழுப்புகிற 24 மணி நேர நன்றியுள்ள சேவகன். ஆன்மீகப்பற்றாளர்களோ அதனை ஆண்டவனுக்கு இணையாக பைரவர் என்றழைத்து அவரை வணங்கினால் தோஷம் நீங்கும் என்பர். அப்பேர்ப்பட்ட நன்றிக் குணம் கொண்ட நாய்க்குத்தான் வளைகுடா நாட்டில் பொது வெளியில் அளிக்கப்படும் தண்டனையைப் போன்று சில கல் நெஞ்சக்காரர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நகரையொட்டியுள்ள பேய்க்குளம் ஊரில் நட்ட நடு வீதியில் நடத்தியிருக்கிறார்கள்.

 

 humanity gone ... the savages who beat the dog

 

பேய்க்குளத்தைச் சேர்ந்த சிலர் தங்களின் ஆடுகளை அந்தப் பகுதியின் வயல் வெளியில் மேய்ச்சலில் விட்டிருக்கிறார்கள். அது சமயம் அந்தப் பக்கமாய் வந்த நாய் ஒன்று அந்த ஆட்டினைக் கடித்திருக்கிறது இதனால் ஆத்திரமானவர்கள் அந்த நாயை அடிக்கவிரட்டிய போது, அது அவர்களிடமிருந்து தப்பித்து ஊருக்குள்ளிருக்கும் டாஸ்மாக் கடையில் பக்கம் பதுங்கியது. அதனைச் சுற்றி வளைத்து ஆடு வளர்க்கும் மூன்று பேர்களும் கம்பாலும், தடியாலும் உடலிலும் மண்டையிலும் ஈவு இரக்கமில்லாமல் வெளுத்து வாங்கியதில் கதறக் கதற துடிதுடித்து உயிரை விரட்டிருக்கிறது. நாயை அவர்கள் அடிக்கும் போது பார்த்த சிலர் கூட அதனைத் தடுக்கவில்லையாம். இந்தக் கொடூரத்தைக் கண்டு பதறிய யாரோ ஒருவர் அந்தக் காட்சியை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட அது வைரலாகி இருக்கிறது. போலீஸ் சும்மா இருக்குமா... இந்தக் காட்சியைக் கண்ட மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரின் உத்தரவையடுத்து சாத்தான்குளம் போலீசார் அந்தப் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, சுந்தரம் இரண்டு பேரைப் பிடித்து விசாரித்து அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

 

வழக்கம் போல் மனிதரிடம் தன் நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இயல்பாய் வாலை ஆட்டுகிற நாய், தன்னை எதற்காக அடிக்கிறார்கள் என்று தெரியாமலே தனது வாலை ஆட்டிக் கொண்டிருந்தது பரிதாபத்தின் உச்சம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.