Skip to main content

ஓடும் ரயிலில் 6 கோடியை கொள்ளையடித்தது எப்படி? சிக்கிய குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்!!

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

 

 

train

 

சேலம் -சென்னை எக்ஸ்பிரஸ் ஓடும் ரயிலில் கடந்த 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பையும், எப்படி ஓடும் ரயிலில் அவ்வளவு பெரிய தொகையை கொள்ளையடித்திருப்பார்கள் என்ற பெரிய கேள்வியையும் ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த கொள்ளை வழக்கில் சிக்கியவர்கள் கொடுத்துள்ள ''எப்படி கொள்ளையடித்தோம்'' என்பது தொடர்பான வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வாக்குமூலமானது,

 

நாங்கள் சேலம்-சென்னை எக்ஸ்பிரசில் அதிக அளவு பணம் எடுத்து செல்லப்படுகிறது என ஏற்கனவே அறிந்திருந்தோம். எனவே கொள்ளையடிக்க நேரம் பார்த்து காத்திருந்தோம். ரயிலில் பணம் எடுத்து சொல்லப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள டீ குடிப்பது, பேப்பர் படிப்பது போன்று பல மாதங்கள் சேலம் ரயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் வேவு பார்த்தோம். ரயில் எங்கெல்லாம் நிற்கிறது, எவ்வளவு நேரம் நிற்கிறது, சம்பந்தப்பட்ட பாதையில் சுரங்கங்கள் இருக்கிறதா? இப்படி எல்லா விஷயங்களையும் முன்னரே கணக்கிட்டு வைத்திருத்தோம். 

 

ஒன்று சேர்ந்த ஐந்து பேர்...

 

நாங்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைத்து, குழுவின் தலைவன் மெஹர்சிங் தலைமையில் திருட காத்திருந்தோம். அந்த நேரத்தில் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கோடிக்கணக்கில் பணம் எடுத்து செல்வதை அறிந்து கூட்டாக அந்த ரயிலில் ஏறினோம். ரயிலில் ஏறிய பிறகு எப்படி சிக்காமல் கொள்ளை அடிப்பது என்பது தொடர்பான திட்டத்தை இன்னொருமுறை எங்களுக்குள் கலந்து ஆலோசித்துக்கொண்டோம். அதன்பின் ஜன்னல் கம்பிகள் வழியாக ஒவ்வொருவராக ரயிலின் பணமுள்ள பேட்டியின் மேற்கூரையில் ஏறினோம். இரவு என்பதால் பெட்டியின் மேல் பகுதியில் கூட்டாக அமர்ந்திருந்தோம். யூகித்தபடியே வழியில் சுரங்கள் இல்லாது இருந்தது. ரயில் சின்ன சேலம் பக்கத்தில் செல்ல செல்ல மேற்கூரையில் துளையிட ஆரம்பித்தோம். துளையிடுவதில் உருவாகும் சத்தத்தை மறைக்க எப்போதெல்லாம் ரயிலின் எஞ்சின் ஒலி எழுப்புகிறதோ அப்போதெல்லாம் அந்த சத்தத்தை சாதகமாக்கி பலமாக தாக்கி துளையிட்டோம் .

 

train

 

உள்ளே இறங்கிய இரண்டு பேர்...

 

ஒரு ஆள் நுழைவதற்கான அளவுக்கு துளை தயாரானவுடன் ஒன்றன் பின் ஒன்றாக இருவரை உள்ளே இறக்கினோம். உள்ளே சென்ற இருவரும் உள்ளே உள்ள மரப்பெட்டியை உடைத்து தேவையான பணத்தை லுங்கியில் கட்டிக்கொண்டு ஏறினார்கள். இந்த மொத்த திட்டமும் விருத்தாச்சலம் ரயில் நிலையம் வருவதற்குள் முடிந்தது. இறுதியில் விருத்தாசலத்தில் நின்றிருந்த எங்கள் இன்னொரு கூட்டாளியிடம் கொள்ளையடித்த பணத்தை  கொடுத்துவிட்டோம்.

 

train

சிக்கிய மூமென்ட்...

 

இவ்வளவு பணத்தை மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடித்து விட்டோம் என சந்தோஷமாக இருந்தோம். அந்த பணம் செல்லாது என அறிந்து பின்னர் ஏமாற்றம் அடைந்தோம். மேலும் பழைய 1000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் என்ன செய்வது என குழம்பி இருந்தோம். வங்கிக்கு எடுத்து சென்றால் எப்படி இவ்வளவு பணம் என கேட்டுவிடுவார்களோ, போலீஸ் பிடித்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி செலவு செய்துவந்தோம். ஆனால் இப்படி சிக்குவோம் என்று நினைக்கவில்லை.    

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.