Skip to main content

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை துவங்கியது! (படங்கள்) 

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில், நாளை (18.11.2021) சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் மூன்று மாவட்டங்கள் என மொத்தம் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேற்கு நோக்கி நகர்ந்துவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகலில் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் மழை

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Rain at chennai
கோப்புப் படம் 

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டுவந்த நிலையில், காலை 8.45 மணி முதல் மிதமான மழை பெய்துவருகிறது. 

 

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதனை தாண்டியும் வெயில் கொளுத்திவந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் இருந்து திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது. வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 

Next Story

சென்னையில் கொட்டி தீர்த்த மழை 

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Heavy rain in Chennai
கோப்புப் படம் 

 

 

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

இதன்படி, சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. திருவொற்றியூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 

 

சென்னையில் சாந்தோம், இராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்தது. பின் நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. 

 

வரும் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.