Skip to main content

5 மாவட்டங்களில் நாளை கனமழை!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

Heavy rain in 5 districts tomorrow!

 

தமிழகத்தில் நாளை ஐந்து மாவட்டங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

அதில் " மன்னார்வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுசேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழகம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்" எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்