Skip to main content

ஈரோட்டிலிருந்து கேரளாவுக்கு பயணமானார்... இந்தியாவின் இரண்டாவது அதிகார மைய தலைவர்

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

ஈரோட்டுக்கு கடந்த 6 ந் தேதி காலை வந்த அந்த.விஐபியால் ஈரோடு நகர் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் தான்.சரியாக முற்பகல் 11.30 க்கு இன்டர்சிட்டி ரயில் மூலம் ஈரோடு ரயில்நிலையம் வந்தார் அந்த வி.ஐ.பி. அடுத்த 15 நிமிடங்கள் ஈரோட்டில் உள்ள அனைத்து இணைப்பு சாலை சிக்னல்களும் அணைக்கப்பட்டது. 

 

erode

 

இருசக்கர வாகனங்கள் கூட தடுத்து நிறுத்தப்பட்டது. கருப்பு பூணை இசட் பிரிவு பாதுகாப்பு படையினர் சூழ மிகுந்த பாதுகாப்பு வளையத்தில் அந்த வி.ஐ.பி. அழைத்துச் செல்லப்பட்டார். வந்தவர், சென்றவர், எங்கே போகிறார் அவர் என்று ஒருசில போலீல் அதிகாரிகளை தவிர்த்து யாருக்குமே தெரியாது. அந்த முக்கிய நபர் பொதுமக்கள் யாருக்கும் சுத்தமாக தெரியவில்லை. 

ஆனால் அவர் தான் இந்திய அரசியல் அதிகார மையத்தின் இரண்டாவது தலைவர் . 

 

 

முதல் தலைவர் அரசியலமைப்பு சட்டப்படி ஜனாதிபதியாவார். அவர் டெல்லியில் இருப்பார். ஆனால் எந்த சட்டத்திலும் இல்லாத இந்த விஐபி தற்போதுள்ள ஜனாதிபதிக்கே தலைவராவார். இவர் நாக்பூரில் இருக்கிறார்.  

 

erode

 

ஆம் இந்தியாவின் இரண்டாவது அதிகார மையமான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இவர்தான் ஈரோடு வந்தார். ஈரோட்டில் நடைபெறும் ஆர் எஸ் எஸ் பயிற்சி  முகாமில் கலந்துகொள்வதற்காகவே மோகன் பகவத் ஈரோடு வந்திருந்தார். 

 

சென்ற ஆறாம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஈரோடு  யு. ஆர் சி பள்ளியில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விட்டு 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோட்டிலிருந்து கிளம்பி கேரளா மாநிலம் புறப்பட்டுச் சென்றார் மோகன் பகவத். 

 

ஈரோட்டில் தங்கிய நான்கு நாட்களும் ஆயிரக்கணக்கான போலீசார் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நடந்த பள்ளி மற்றும் ஈரோடு முழுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.