Published on 03/02/2021 | Edited on 03/02/2021

தமிழகத்தில் குட்கா போன்ற போதை வஸ்துக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் தமிழத்தில் பதுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூரில் அமமுக நகரச் செயலாளர் அப்துல் ரஷீத் வீட்டில், 23 மூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி நிர்வாகி வீட்டில் குட்கா மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.