Skip to main content

'கூடுதலாக 1,650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கும்' - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

tn assembly interim budget 2021 ops announcement

 

2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், "சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்புகள், 2020-ஆம் ஆண்டில் 8,060 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. நீதியை விரைவாகவும், முனைப்பாகவும் வழங்குவது ஒரு திறம்பட நிர்வகிக்கப்படும் நவீன நாட்டின் முக்கிய அம்சமாகும். 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இந்திய நீதி அறிக்கைகளில் நீதித்துறை என்ற பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல், தகவல்தொடர்பு அமைப்புகள், மீன் பதப்படுத்தும் வசதிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாயிரம் இழுவலை மீன்பிடி படகுகளை மாற்றுவதற்கான சிறப்புத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 42 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளன. மீனவர்களின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 2020 - 2021 ஆம் ஆண்டில் 301.31 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறைக்கான மூலதன செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் ரூபாய் 580.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 43 புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூபாய் 1,374 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் தேசிய நீர் விருதுகளில் தமிழகம் முதலிடத்தை வென்றுள்ளது.

 

கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அத்திக்கடவு - அவிநாசி வெள்ளக்கால்வாய் திட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வள ஆதார திட்டங்களுக்காக 2021 - 2022 இல் ரூபாய் 6,453.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் வலையமைப்புத் திட்டத்திற்காக ரூபாய் 287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-க்குள் முடிக்கப்படும். விவசாயிகளின் பயிர்க்காப்பீடு திட்டத்துக்காக ரூபாய் 1,738.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் வேளாண்துறைக்கு ரூபாய் 11,982.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஹார்வர்டு, ஹுஸ்டனைத் தொடர்ந்து, டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கும் தமிழ் இருக்கை அமைய நிதியுதவி அளிக்கப்படும்.

 

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (ஊரகம்) ரூபாய் 3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (நகர்ப்புறம்) ரூபாய் 3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு ரூபாய் 2,350 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூபாய் 1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டு திட்டத்திற்கு ரூபாய் 871.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022 கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும். 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, நடப்பு கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Next Story

ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் - தேதியை அறிவித்த சபாநாயகர்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
nn

தமிழக ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  வருகின்ற பிப்.19 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து 29 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், வருகின்ற 21ம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்கள்.

ஆளுநர் உரையை தயாரிப்பது அரசின் வேலை. அரசு அந்த பணியை சரியாக செய்யும். போன வருடம் ஆளுநர் உரையின் போது ஏற்பட்ட சர்ச்சை நம்மால் ஏற்பட்டது அல்ல. சட்டமன்ற பேரவை தலைவராலோ அல்லது அரசாலோ எந்த சர்ச்சையும் வரவில்லை. இந்த வருடம் நன்றாக இருக்கும்'' என்றார்.

அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ''சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பான முழு உரிமையும் சட்டப்பேரவை தலைவருக்கு தான் உண்டு என நானும் சொல்கிறேன். இதுக்கு முன்னால் இருந்த சபாநாயகர் தனபாலும் அதை சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்'' என்றார்.

கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தது சலசலப்பை ஏற்படுத்த, பாதி உரையில் இருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.