Skip to main content

கிரிவலம் - இலவச கழிப்பறைக்கு பணம் வசூல். 4 பணியாளர்கள் சஸ்பென்ட்

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
girivalam

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பௌர்ணமி கிரிவலம் இந்தியாவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்து 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை வலம் வருவார்கள்.

 

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு, தற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் தொட்டிகள், மருத்துவ வசதிகள் உட்பட பலவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தருகின்றன. அதன்படி கிரிவலப்பாதையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள இந்த கழிப்பறைகள் பக்தர்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இலவசம் என்பதற்காக இதனை அசுத்தம்மாக இருக்ககூடாது என்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இன்று 1.3.2018 முதல் 2.3.18 ந்தேதி காலை 8.15 வரை பௌர்ணமி. அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்துக்கொண்டு உள்ளார்கள். அதோடு, இன்று மாசி மக பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் கூட்டம் கிரிவலப்பாதையில் உள்ளது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திடீரென கிரிவலப்பாதையில் இரவு 8 மணியளவில் பயணம் மேற்க்கொண்டார்.  

 

அப்போது, இலவச கழிப்பறை ஊழியர்கள் சிறுநீர் கழிக்க உட்பட எதற்கு சென்றாலும் தலைக்கு 10 ரூபாய் என வசூல் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கழிப்பறை சென்று வந்த பக்தர்களும் பணம் தந்ததை உறுதி செய்தனர். அப்படி 4 இடங்களில் வசூல் செய்ய இதை நேரடியாக கண்டவர், சம்மந்தப்பட்ட 4 பேரை சஸ்பென்ட் செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த இடத்தில் வேறு பணியாளர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை கண்ட பக்தர்கள்பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

 

இதேப்போல், கிரிவலப்பாதை உட்பட நகர் முழுவதும் பௌர்ணமி நாட்களில் திடீர் ஹோட்டல்கள் உருவாகி சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும்,  திருவண்ணாமலை டூ சென்னை, திருவண்ணாமலை டூ பெங்களுரூ மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் சிறப்பு கட்டணம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனையும் மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும்..... செய்வாரா ?.

- ராஜ்ப்ரியன்

சார்ந்த செய்திகள்

Next Story

நன்கொடை வசூலிப்பது குற்றம் - லஞ்சம் பெறும் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட ஆணை

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

 

jkl

 

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி  தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிக்கின்றன என்ற புகார் நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இதனைத் தடுத்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி  தண்டனைக்குரிய குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளது.

 

மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுப்பதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் விவரங்களைத் தெரிவிக்க இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


 

Next Story

பிரச்சனையை தீர்க்கணுமா? புது ரூட் போட்டு தீபாவளிக்குள் வசூல் வேட்டை!!!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
dddd

 

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், போனஸ் என்று உற்சாகமாக பெறும் தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, அரசாங்க ஊழியர்களுக்கு அரசே போனஸ் வழங்கி மகிழ்விக்கிறது. இப்படி சலுகைகள் வழங்கபட்டாலும், இவற்றையெல்லாம் தாண்டி புது ரூட் போட்டு பணம் வசூலிக்கும் முறையை காவல்துறை துவங்கி உள்ளது. 

 

திருச்சி மாவட்டத்தை சுற்றி 14 யூனியன் பஞ்சாயத்துகள் உள்ளது. அதில் 404 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடங்கி உள்ளது. கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சி தலைவர்கள் விழிப்புணர்வு கொடுக்க வந்த அதிகாரிகள், காவல் துறையினரோடு நல்ல நட்பை உருவாக்கியுள்ளனர். அந்த நட்பின் மூலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு ஒவ்வொரு கிராம ஊராட்சி தலைவர்கள் தீபாவளி பரிசாக 3000  ரூபாய் கொடுத்து கவனித்துள்ளனர். அதே போல் தீயணைப்பு துறைக்கும் அந்தந்த ஊராட்சி சார்பில் அதன்  தலைவர்கள் கவனித்துள்ளனர். 

 

இந்த கவனிப்பின் நோக்கம் பற்றி விசாரித்தபோது, நாளை எந்தவித சட்டம் & ஒழுங்கு பிரச்சனை வந்தாலும் ஊராட்சி தலைவருக்கு சாதகமாக அமையும்படி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கவனிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வாய் மொழி ஒப்பந்தத்தை ஒரு சில புறநகர் காவல் நிலையங்கள் மிக மும்மரமாக செயல்படுத்தி தீபாவளிக்குள் வசூல் வேட்டையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.