Skip to main content

அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்களுக்கு பரிசு!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

 

 

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் இளைஞர்களும் பெற்றோரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுடன் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளனர். பல கிராமங்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கவர்ச்சிகரமான பரிசுகளையும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளனர். இதனால் பல பள்ளகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களை மாற்றுப் பணிக்கு அனுப்ப அதிகாரிகள் உத்தரவு போடும் நிலையில் மாணவர்களை அதிகம் சேர்த்து உத்தரவுகளை ரத்து செய்ய வைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. இப்படி பரிசுகளை இளைஞர்களும் கிராமத்தினரும் வழங்கிவந்த நிலையில் ஒரு வட்டார கல்வி அதிகாரி அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பரிசும் பாராட்டு சான்றும் வழங்குவதாக அறிவித்திருப்பது மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது பெற்றோர்களையும் இளைஞர்களையும்.

 

 

இந்த அறிவிப்பு.. புதுக்கோட்டை  மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் உள்ள அன்னவாசல் வட்டார கல்வி அலுவகத்திற்குட்பட்ட இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு தலைமையில் நடைபெற்றது.. 

ஸ்மார்ட் வகுப்பறையினை தொடங்கி வைத்து வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு பேசும் போது தான் அறிவித்தார்.. மேலும் அவர் பேசும் போது.. அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கல்வித் தரம் உயரவும், பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. அதன் ஒரு பகுதி தான் கணினி வசதியுடன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க வேண்டும் என்பது.. ஆனால் ஸ்மார்ட் வகுப்பு அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என அறிவிப்பு செய்துள்ள நிலையில் அரசை எதிர்பார்க்காமல்  அதற்கு முன்பாகவே ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கிய இப்பள்ளி தலைமையாசிரியரின் பணி பாராட்டுக்குரியது.. தனியார்  பள்ளிகளில் பல ஆயிரங்கள் செலுத்திப் பெற வேண்டிய ஸ்மார்ட் வகுப்பறை நமது இலுப்பூர் பள்ளியில் அமைந்துள்ளது தனி சிறப்பு. எனவே இங்கு வந்துள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளை 5 பேருக்கு மேல் கொண்டு வந்து இப்பள்ளியில்  சேர்த்தார்கள் எனில் அவர்களுக்கு அன்னவாசல் வட்டார கல்வி அலுவலகத்தின் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றார்..

 

 

 

ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க நிதி வழங்கிய திருச்சியைச் சேர்ந்த சபாபதி, ராஜா ஆகியோர்: சிங்கப்பூரில்  பணிபுரியும்  25 நண்பர்கள் இணைந்து வாட்ஸ் குழு ஒன்று அமைத்துள்ளோம்.. இதில் தஞ்சை, திருநெல்வேலி என மாநிலத்தின் பல பகுதியில் உள்ள நண்பர்கள் இடம் பெற்றுள்ளனர்.. எங்களது நோக்கம் என்னவென்றால் நாங்கள்  எப்போதும் சந்தோசமாக இருக்கனும், அதே நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கனும் என்பதே .. மகிழ்ச்சி ஒன்றே முக்கியம் எங்களுக்கு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.. அப்பொழுது இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் எங்களிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் இப்பள்ளிக்கு சென்ற ஆண்டில் 1 இலட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான கழிவறை கட்டி தந்துள்ளோம்.. இந்தாண்டு 1 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க புராஜெக்ட்டர், ஸ்பீக்கர், திரை அனைத்தும் வழங்கியுள்ளோம் என்றனர்.. இது போன்று நன்றாக செயல்படும் அரசு பள்ளிகளை அடையாளங்கண்டு நாங்கள் எங்களால் இயன்ற உதவியினை செய்ய தயாராக உள்ளோம் என்றனர்.

 

 

 

 

பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ்: இலுப்பூர் நகரின் மையத்தில் சிவன் கோவில் அருகில் எம் பள்ளி அமைந்துள்ளது.. பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனையும், சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்தும் வகையிலும், ஒரு புதிய மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை முறையில் பாடங்கள் பயிற்றுவிக்கும் முறையினை அறிமுகம் செய்துள்ளோம். இப்பள்ளியில் சுகாதாரமான கற்றோட்ட வசதி, கணினி வழிப்பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பான சுற்றுச் சுவர் வசதி என பல்வேறு வசதிகள் உள்ளன.. இவை அனைத்தும் உள்ளூர் மக்கள் உதவியுடனும் ஜெர்மன் தம்பதி ஜோஸ்வா அவர்கள் அளித்த நன்கொடையுடனும் தான் செய்துள்ளோம்.  நான் தலைமை ஆசிரியராக பணிபுரியும் போது 100 க்கும் குறைவான மாணவர்கள் இருந்த இப்பள்ளியை 121 மாணவர்கள் பயிலும் பள்ளியாக மாற்றியதை மகிழ்வாக கருதுகிறேன். இன்னும் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதே எனக்கு இலக்கு அதற்கு வட்டாரக் கல்வி அலுவலரின் பரிசு அறிவிப்பு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றார்.

 

 

 

 

முன்னதாக அரசுப் பள்ளியின் தரம் குறித்த மாணவர்களுக்கும் வந்திருந்த பெற்றோர்களுக்கும்  குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு, வட்டார வள மைய பயிற்றுநர் மஞ்சுளா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நல்லகுமார் மற்றும் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.. முடிவில் ஆசிரியர் பிச்சைக் கண்ணு நன்றி கூறினார்..

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

Next Story

தேசிய கராத்தே போட்டியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Trichy Government School Girl  Achievement in National Karate Competition

திருச்சி கோட்டை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் சாய்னா ஜெட்லி. இவர் 23 உலக சாதனைகளையும் கின்னஸ் உலக சாதனையும் பெற்றவர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், துணை மேயர் திவ்யா தனக்கொடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பாரத் விபூஷன் விருது பெற்றுள்ளார். இவர் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கராத்தே பயிற்சியாளர் பிரபல டேக்வாண்டோ கிராண்ட் மாஸ்டர் கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி உள்பட பலர் பாராட்டினர்.