Skip to main content

பண்டிகையில் குறிவைக்கும் திருட்டு கும்பல் உஷார்... உஷார்... உஷார்...

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் டவுனில் ராம்மோகன் என்பவர் பேன், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், பீரோ, கட்டில் கடை நடத்திவருகிறார். இவரது கடையில் விலைஉயர்ந்த டிவி வாங்க வந்ததுபோல் நடித்து இரண்டுபெண்கள் ஒரு ஆண் ஆகிய மூன்று பேர் ஒரு டிவியையே பட்ட பகலில் திருடிக் கொண்டுபோயுள்ளனர். கடை ஊழியர் ஒரு டிவியை காணோம் என்று சொல்ல அந்த மூன்று பேர்கள் மீது சந்தேகம் வந்தது. ஓடிப்போய் பெண்ணாடம் போலிசில் புகார் கொடுத்தார் ராம்மோகன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு எஸ்.ஐ. கோபாலகிருஷ்ணன், கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு மேற்படி மூவரையும் அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் மூவரும் அரியலூர் மாவட்டம் தண்டலை கிராமத்தை சேர்ந்த சங்கர், கல்பனா, கற்பகம் ஆகிய மூவரையும் கைது செய்து டிவியையும் கைப்பற்றினார்கள்.

 

robbery

 

இவர்கள் மட்டுமல்ல இதே ஊரைச் சேர்ந்த பலர் இதேபோல் ஷோ ரூம் கடைகள், நகைகடைகள், ஜவுளிகடைகளில் திருடுவது கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்களில் கூட்டம் கூட்டமாக சென்று பெண்களின் தாலி செயின்களை பறிப்பது, வங்கி வாசலில் நின்று பணம் எடுத்துவருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணம் எடுப்பது, பஸ்சில் ஏறி பெண்கள் ஆண்கள் என பலரிடமும் பிக்பாக்கெட் அடிப்பது என இதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக இவர்களில் ஆண்கள் பெண்கள் என பலரும் செய்கிறார்கள். திருடிய பொருளை உடனடியாக ஆள் மாறிமாறி அனுப்பிவிடுவார்கள். திருடியவர்கள் என்று சம்பந்தப்பட்ட ஆளை பிடித்து சோதனைபோட்டாலும் பொருள் இருக்காது. அது மாறிமாறி போய்விடும் பஸ்சிலும் இதேபோல் தான் நடக்கும்.

 

robbery

 

இப்படி திருடிய பொருட்களை இவர்கள் தங்கள் ஊருக்கு கொண்டுபோய் சேமித்து வைத்து விலைக்குறைவாக விற்பார்கள் பலரும் தங்கள் குடும்ப திருமணம் போன்ற காரியங்களுக்கு இவர்களிடம் பொருட்கள் வந்து வாங்கி செல்கிறார்கள். இப்படி திருடுவது தவறு என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் திருட்டு தொழிலை கச்சிதமாக செய்து வருகிறார்கள். இவர்கள் மீது தமிழகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. திருடி மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு போவதும், திரும்பி வந்து மீண்டும் அதே தொழிலை செய்வதும் இவர்களுக்கு சர்வசாதாரணமான ஒன்று. இவர்கள் திருடும் மாடலை வைத்தே போலீஸ் கண்டு பிடித்துவிடும் ஊருக்கே சென்று கைது செய்து பொருட்களை கைப்பற்றுவது என்று அடிக்கடி நடக்கும்.

 

இதேபோல் திருச்சி ராம்ஜி நகரில் குடும்பத்தினர்களோடு கும்பாலாக சென்று திருடுபவர்களும் நிறைய உள்ளனர். ஒருமுறை திட்டக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகத்தில் போது மக்கள் கூட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களின் தாலி சரடு, செயின் அறுக்கப்பட்டது. சுமார் 100 பவுன் இதை திட்டக்குடி போலீசார் சவாலாக விசாரணை செய்து ராம்ஜி ஆட்களிடம் பரிமுதல் செய்து பரிகொடுத்த பெண்களிடம் நீதிமன்றம் மூலம் ஒப்படைத்த வரலாறும் உண்டு. இந்த திருட்டுக்கள் அதிக அளவில் நடக்கும் எப்போது தெரியுமா தீபாவளி பொங்கள் போன்ற விசேஷ நாட்களில்தான். கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்சிலும் சரி, கடைகளிலும் சரி திருடிவிட்டு எளிதில் தப்பிவிடமுடியும் என்பதால் விழாக்காலங்களை தேர்வு செய்கிறார்கள்.

 

 

 இந்த திருட்டுகும்பலை திருந்தி வாழவைக்க பல காவல்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தும் முடியவில்லை என்கிறார்கள் காவல்துறையினர். பணத்தை, நகையை, பொருட்களை பரிகொடுத்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள். திருடியவர்களை சாபமிடுவார்கள் போலீஸ் புடிக்குமே சிறைக்கு போகனுமே என்று கவலைப்படாமல் திருடுவது எங்கள் குல தொழில் என்பதுபோல் திருடி வருகிறார்கள். அந்த காலத்தில் வழிப்பறி கும்பல் தீ வட்டி வெளிச்சத்தில் ஊர் புகுந்து திருடும்  கும்பல் என பல இருந்தன. காலங்கள் மாறி நாகரீகம் விஞ்ஞான வளர்ச்சி என வந்தாலும் திருடும் கும்பலும் அதற்கு ஏற்றவாறு தங்கள் திருட்டு வழிமுறைகளையும் மாற்றி கொண்டு திருடுகிறார்கள். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.