Skip to main content

பெண் வேடத்தில் குழந்தை கடத்தலா?-வேகமாக பரவும் வதந்தி

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A gang of child traffickers masquerading as girls?-a rumor spreading fast

'புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பெண் வேடமிட்டு 10 பேர் குழந்தைகளை கடத்த இறங்கி உள்ளனர். அதில் ஒருவன் பிடிபட்டு விட்டான். மீதிப்பேர் எங்கே என்று தெரியவில்லை. அதனால் கவனமாக இருங்கள்' என்ற ஒரு ஆடியோவுடன் சிறிய வீடியோ ஒன்றும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை முதல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

என்ன நடந்தது? எப்படி இந்த வதந்தி பரவியது?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று வியாழக்கிழமை காலை சேலை, சட்டை அணிந்த ஒருவர் சென்று அங்கிருந்த சிலரிடம் தவறாக பேசியதும் அங்கிருந்தவர்கள் விரட்டியது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நின்ற குழந்தைகளிடம் பேசியதைப் பார்த்த அப்பகுதியினர் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்து பிடித்து ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை செய்த போது அவர் பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும், வீட்டில் பாதுகாப்பில் இருந்து தப்பி வந்தவர் வழியில் எங்கோ காயப்போட்டிருந்த ஒரு பெண் சேலை, சட்டையை போட்டுக் கொண்டு கீரமங்கலம் வந்து இப்படி நடந்து கொண்டதும் தெரியவந்தது.

மேலும் சம்பந்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது உறவினர்கள் தேடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களை அழைத்து சம்பந்தப்பட்ட ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதற்குள் குழந்தைகளை கடத்த பெண் வேடமிட்டு 10 பேர் வந்ததில் ஒருவர் சிக்கிக் கொண்டார் மற்றவர் இந்தப் பகுதியில் சுற்றுவதாக ஆடியோ வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. இப்படி யாரும் வரவில்லை பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கடத்தப்பட்ட 15 வயது சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Kidnapped 15-year-old girl rescued after 30 days

கீரமங்கலம் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் 15 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் ஜூன் 4 ந் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. பெற்றோர்களும் உறவினர்களும் எங்கு தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல்  நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், கொத்தக்கோட்டை அம்மயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த அரங்குளவன் மகன் காமராஜ் (வயது 24) மற்றும் அவரது நண்பன் கோவிலூர் சம்பாமனை சங்கர் மகன் முருகேசன் (23) ஆகிய இருவரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து பழுதான ஒரு மோட்டார் சைக்கிளை புதருக்குள் போட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி கொண்டு சென்றுள்ளனர் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் சிறுமியை கடத்திய வாலிபர்களின் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் செல்போன் எண்களை ஆய்வு செய்து தலைமறைவாக உள்ள சிறுமி மற்றும் 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். அவர்களது செல்போன் சிக்னல்கள் கிடைக்காமல் திணறிய போலீசார் அடுத்தடுத்த முயற்சிகள் செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமி கோவையில் இருப்பது பற்றிய தகவல் கிடைத்து காவல் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் கீரமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் கணபதி தலைமையிலான போலீசார் கோவைக்கு சென்று சிறுமி மற்றும் அவரை கடத்தி சென்ற காமராஜ் ஆகியோரை மீட்டு கீரமங்கலம் கொண்டு வந்துள்ளனர்.

15 வயது சிறுமி கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story

அடிக்கடி தலைதூக்கும் அரிவாள் கலாச்சாரம்-தலைகவிழ்ந்தே கிடக்கும் கண்காணிப்பு கேமராக்கள்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
A sickle culture that frequently rears its head—surveillance cameras with upside down heads

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அடிக்கடி சிலர் கஞ்சா போன்ற மாற்றுப் போதையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு கடைவீதியில் சுற்றுவதும், கடைகளை உடைப்பதும், கடையில் உள்ளவர்களை தாக்குவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் தடுமாறும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் திக் திக் மனநிலையிலேயே கடைவீதிக்கு வந்து செல்கின்றனர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் அரிவாளோடு வந்து பல கடைகளையும், ஏடிஎம் கதவுகளையும் அடித்து உடைத்துச் சென்றுள்ளனர். அவர்களை ஆலங்குடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்த கடைகள் முதல் பலரும் ரவுடிகளுக்கு பயந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவு இல்லை என்று சொல்லி விட்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோன்ற செயல்களை தடுக்க அப்போதைய ஆலங்குடி காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் (தற்போது டி.எஸ்.பி), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வீரமணி (தற்போது திருச்சி ராம்ஜி நகர் ஆய்வாளர்) ஆகியோர் ஆலங்குடி பேருந்து நிலையம், அரசமரம், வடகாடு முக்கம், பேரூராட்சி முக்கம், பாத்தம்பட்டி முக்கம், சந்தைப்பேட்டை என பல இடங்களிலும் 15 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த காவல்நிலையத்தில் தனியறையில் பெரிய டிவியில் ஓடவிட்டு கண்காணித்து வந்தனர். இதனால் அந்த சில ஆண்டுகள் இதுபோன்ற அரிவாள் கலாச்சாரம் ஓய்ந்திருந்தது. வணிகர்களும், பொதுமக்களும் நிம்மதியடைந்திருந்தனர். அதேபோல் போக்குவரத்தை சரி செய்ய சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த கயிறு அடித்தும் பல இடங்களில் கார்டுலெஸ் ஸ்பீக்கர்கள் வைத்தும் போக்குவரத்து சரி செய்யப்பட்டதால் போக்குவரத்தும் சீராக இருந்தது விபத்துகளும் தடுக்கப்பட்டது.

ஆனால் அந்த சில ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் உள்ளது. அதேநேரத்தில் முன்பு அமைக்கப்பட்ட அத்தனை கேமராக்களும் நகரில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து தலைகுனிந்து கிடக்கிறது. நகர மக்களையும், வணிகர்களையும் காக்க பேரூராட்சி நிர்வாகமோ, காவல் நிர்வாகமோ அந்தக் கேமராக்களை சரி செய்ய நினைக்கவில்லை. இந்த கேமராக்கள் சரி செய்து இயங்கத் தொடங்கினாலே பல குற்றச்செயல்களை தடுக்க முடியும் வணிகர்களும், பொதுமக்களும் அச்சமின்றி இருப்பார்கள். மேலும் இந்த கேமராக்கள் சரி செய்யப்படால் வெளியூர்களில் இருந்து தப்பிவரும் குற்றவாளிகளைக் எளிமையாக அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என்கின்றனர் மக்கள்.