Skip to main content

கொலை கைதிகள் நால்வருக்கு 'குண்டாஸ்!'; சேலம் போலீஸ் கமிஷனர் அதிரடி!!

Published on 31/08/2018 | Edited on 31/08/2018

சேலத்தில் கொலை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு ரவுடிகள் மீது ஒரே நாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது. 


சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது. போலீசார் விசாரணையில், இறந்தவர் சேலத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பதும், முன்விரோதம் காரணமாக அவரை நான்கு பேர் கொலை செய்து, சடலத்தை தண்டவாளத்தில் வீசிச்சென்றிருப்பதும் தெரிய வந்தது. 

murder

 

 

murder

 

 

 

இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் குகை ஆற்றோரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பிரியாணி மணி என்கிற மணிகண்டன் (29), டாவு மணி என்கிற மணி (24), அம்மாபேட்டை அரசமரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிஜோதி (31), அஸ்தம்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த குவார்ட்டர் முருகன் என்கிற முருகன் (37) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

murder

 

 

murder

 

 

 

இவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் கடந்த ஜூலை 30ம் தேதியன்று, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கத்தி முனையில் வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட நால்வரும் தொடர்ந்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷநர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர்.


அவருடைய உத்தரவின்பேரில் மேற்படி நால்வரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.