Skip to main content

நான்கரை வயது சிறுமி கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்க தொட்டியில் வீச்சு!! போலீசார் விசாரணை!!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நான்கரை வயது சிறுமி தரை மட்ட நீர்தேக்க தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி யார் என போலீசார் தீவிர விசாரணை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

A four-and-a-half-year-old child was murdered in water reservoir !! Police investigation

 

கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவரது மனைவி சஜிதா வயது (32) இவருக்கு சுபாஷினி (வயது 14) ஸ்ரீஹர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். முத்த மகள் கோத்தகிரியிலுள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். சஜிதாவின் கணவர் அதேபகுதியில் உள்ள சென்‌னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு  சொந்தமான பங்களாவில் காவலாளியாக  பணிபுரிந்து வந்துள்ளார்.

 

 அவர் இறந்த பிறகு அந்த வீட்டின் உரிமையாளர் சென்னையில் இருப்பதால்  அவரது வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்யும் தொழிலாளியாக சஜிதா பணிபுரிந்து வந்துள்ளார்.  சஜிதாவிற்கு குடிப்பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை இரண்டாவது மகளான ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

 

புகாரின் பேரில் நேற்று மாலை சுமார் 4 மணிஅளவில்  போலீசார் எம் கைகாட்டி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். பின்னர் சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கும்போது அங்குள்ள சுமார் 8 அடி உயரமுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியின் முடியை திறந்து பார்த்தபோது அதில் பொம்மை ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டனர். உடனே அருகிலிருந்த  காணாமல் போன குழந்தையின்  சகோதரியை அழைத்து அந்த பொம்மை காணாமல் போன ஸ்ரீஹர்ஷனியுடையதா என்று கேட்க அவர் ஆம் என்று சொல்லியுள்ளார். 

 

இதனை தொடர்ந்து தொட்டிக்குள் நன்றாக தேடியபோது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள்  முழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிறுமியின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

சம்பவமறிந்து பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடிப்பழக்கம் உடைய சஜிதா தன்னுடைய நான்கரை வயது மகளை கிணற்றில் வீசி கொலை செய்தாரா?  அல்லது  வேறு காரணங்களால் வேறு யாரேனும் கொலை செய்து வீசி சென்றனரா?  என்ற கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு  செய்து அதிலுள்ள பதிவுகளை வைத்து உண்மையான குற்றவாளி யார் என்று விசாரணை ‌செய்து வருகின்றனர் போலீசார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.