Skip to main content

வால்பாறை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை  மேல் நீராறு. சோலையாறு காடம்பாறை மேல் ஆழியாறு ஆகிய ஐந்து அணைகளும் நிரப்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை இரண்டுமுறை நிரம்பியது . 
 

forest department warns vaalpaarai people


இந்நிலையில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் பிஏபி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் . இதனிடையே தென்மேற்கு பருவமழையின் போது நிரம்பாத ஆழியாறு , பரம்பிக்குளம் அணைகள் வடகிழக்கு பருவமழையின் போது நிரம்பும் என்ற நம்பிக்கையில் பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர் . அணைகளின் நீர்மட்டம் சோலையார் அணையில் நேற்று காலை 159. 33 அடி நீர் மட்டும் இருந்தது அணைக்கு வினாடிக்கு 352 கனஅடி தண்ணீர் வரத்தும் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் நேற்று காலை 70.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 507 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நிலவரம் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வால்பாறை 8 சோலையாறு 11 மேல் நீராறு 14 கீழ் நீராறு 15 காடம்பாறை என அனைத்து இடங்களிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


மேலும் வன விலங்குகள் கன மழையால் சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சுற்றி வருகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.