Skip to main content

“பொதுமக்கள் கவனத்திற்கு...” - உணவுப் பொருள் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு!

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
Food Supply Department Important Notice To the attention of the public

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) இயங்கும் எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆகஸ்ட் 31ஆம் தேதி ((31.08.2024) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.

இருப்பினும் இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்றுப் பயனடையலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்