Skip to main content

தேனியில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்! -ஒபிஎஸ் பேட்டி!!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று போடி சங்கராபுரம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டார் பின்னர் தேனி சுற்றுலா மாளிகையில் பத்திரிகையாளரிடம் பேசிய ஒபிஎஸ்...

 

Food park to be constructed in 500 acres of land in Theni district Interview with OBS !!

 

பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அதற்கான இடம் தேர்வு செய்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் அதன் அடிப்படையில் பழங்கள், காய்கறிகள் விலை ஏற்றத்திற்கு பின்பு விற்பதற்கு உணவுப் பூங்கா 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். உணவுப் பூங்கா தொடங்கப்பட்ட பின்பு தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களை அழைத்து மாநாடு நடத்தப்படும். 

 

மேலும் தேனி மாவட்டத்தில் விவசாயம் அதிகப்படியாக செய்வதால் தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். போடி - மதுரை இரயில் அகலப்பாதை பணிகள் சிறுசிறு பாலங்கள் முழுமை பெற்று வருகின்றது. விரைவில் பணிகள் நிறைவுபெறும். 18 ஆம் கால்வாய் மற்றும் 58 ஆம் கால்வாய்க்கு 15 நாட்களுக்குள் தண்ணீர் திறப்பது குறித்து நிலையான அரசாணை வெளியிடப்படும். 

 

டெங்கு நோயால் இறப்பவர்கள் முறையாக மருத்துவரை அணுகாமல் மருந்தகத்தில் மாத்திரை சாப்பிட்டவர்களே, சுகாதாரத்துறை உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கூட்டு முயற்சியினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கேரளா மற்றும் தமிழகத்தை இணைக்கும் பாதைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கூறியபின்பு அணையின் நீரமட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. பேபி  அணையை பலப்படுத்திய பின்பு 152 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அரசு பேபி அணையை பலப்படுத்துவதற்கு 7 கோடி நிதி ஒதுக்கியும் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று  கூறினார். 

 

இந்த  பேட்டியின் போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் மாவட்ட செயலாளர் சையது கான் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.