Skip to main content

சேலம் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Published on 21/03/2019 | Edited on 22/03/2019


வாழப்பாடி அருகே, பத்து வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில், குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 21, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருடைய மகள் பூங்கொடி (10). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். 

 


கடந்த 2014ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி தனது பெற்றோர், சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை.

 

bb


பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில், சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் மர்ம உறுப்பிலிருந்து ரத்தம் வழிந்து தோய்ந்து இருந்தது. முகத்தில் நகக்கீறல்கள் இருந்தன. அந்தக் காயத்தின் மீது முகத்திற்கு போடப்படும் பவுடர் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. 

 


நெஞ்சை பதற வைத்த இந்த சம்பவம், அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 


இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியின் வீடு அருகே வசிக்கும் பூபதி (36), அதே பகுதியைச் சேர்ந்த ஸ்னேக்பாபு என்கிற ஆனந்த்பாபு (34), ஆனந்தன் (26), பிரபாகரன் (31), பாலு என்கிற பாலகிருஷ்ணன் (330 ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 


இவர்களில் பூபதி, பாமகவை சேர்ந்தவர். அப்போது சென்றாயன்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். கைது நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டார்.

 


இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அப்போது பல்வேறு அமைப்புகள் போராடின. கைதான  நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை நிலவரத்தை, அப்போதைய சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் கேட்டறிந்தார்.

 


சம்பவத்தன்று இரவு குடிபோதையில் இருந்த இவர்கள் ஐந்து பேரும், பரமசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர். பூங்கொடி கூச்சல் போட்டு விடாமல் இருக்க அவளது வாயில் துணியை அடைத்துள்ளனர். சம்பவத்தின்போது பரமசிவத்தின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கதவு, பழுது ஏற்பட்டதால் அப்புறப்ப டுத்தப்பட்டு இருந்ததால், சேலை துணியால் வாசலை மறைத்து இருந்தனர். அதனால் துணியை விலக்கிவிட்டு இவர்கள் வீட்டுக்குள் நுழைந்த சந்தடி யாருக்கும் கேட்கவில்லை. 

 


சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரடு பகுதிக்குச் சிறுமியை கடத்திச்சென்ற அந்த கும்பல், துடிக்க துடிக்க கூட்டு வன்புணர்வு செய்துள்ளது. அப்போது சிறுமியின் முகத்தில் நகக்கீறல்களால் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் சொட்டியதால், அவற்றில் முகத்திற்குப் பூசும் பவுடரைக் கொண்டு அடைத்துள்ளனர். 

 


காமக் கொடூரன்களிடம் சிக்கிக்கொண்ட சிறுமி, அவர்களிடம் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு தப்பிச்சென்று விட்டனர். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

 

bb

 

இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த இரண்டு வழக்கறிஞர்கள் இடையிலேயே மாற்றப்பட்டனர். மூன்றாவதாக ஆஜரான வழக்கறிஞர் தனசேகரன், அரசுத்தரப்பில் ஆஜராகி இறுதி வரை வாதாடினார்.

 


நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் இருதரப்பு வாதங்களும் நடந்து முடிந்தன. இதையடுத்து மார்ச் 19, 2019ம் தேதியன்று, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரங்கள் மார்ச் 21ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

 


அதன்படி, குற்றவாளிகளுக்கு வியாழக்கிழமை தண்டனையின் முழு விவரங்களையும் நீதிபதி விஜயகுமாரி வாசித்தார். குற்றவாளிகள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.


தீர்ப்பின் முழு விவரம்: 


இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120 பி - கூட்டுச்சதி, 450 - வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், 366 - வன்புணர்வு ஆகிய குற்றங்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

bb

 

பிரிவுகள் 363 - தந்தையிடம் இருந்து குழந்தையை கடத்தல், 201 & தடயங்களை அழித்தல் ஆகிய குற்றங்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், பிரிவு 404 - இறந்தவரின் உடைமையை கடத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 


மேலும், பிரிவு 302 - கொலை குற்றத்திற்கும், போக்சோ சட்டப்பிரிவு 5 மற்றும் 6ன் கீழும் தலா ஓர் ஆயுள் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு அளித்தார். அதாவது குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தார்.

 

இத்தீர்ப்பு குறித்து, சிறுமி பூங்கொடியின் தந்தை பரமசிவத்திடம் கேட்டபோது, ''மகளைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்தாலும், என் மகள் என்னைவிட்டுப் போனது போனதுதான். இனி, அவள் திரும்பி வரப்போவதில்லை. நான் சாகும் வரைக்கும் என் மகளின் நினைவுகள் என்னை விட்டு அகலாது. உப்பைத்தின்றவன்  தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். அவர்கள் செய்த பாவம் அவர்களை சும்மா விடாது. ஒரு உயிரின் வலியை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு யாருக்குமே ஏற்படக்கூடாது,'' என்று கண்ணீர் சிந்தினார். 

 


தண்டனை விவரங்களை கேட்டதும், நீதிமன்றத்தில் கூடியிருந்த குற்றவாளிகளின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். கூச்சல் போட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''பத்து வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்கில் ஆயுள் தண்டனை மட்டுமே கொடுத்திருப்பதில் முழு திருப்தி இல்லை. தூக்கு தண்டனைதான் கொடுத்திருக்க வேண்டும்,'' என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.