Skip to main content

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

nn

 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரனை மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியதாக திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. 16 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்