Skip to main content

கோவையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ், பேனர்கள் அகற்றம்

Published on 30/11/2017 | Edited on 30/11/2017

கோவையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட
 பிளக்ஸ், பேனர்கள் அகற்றம்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட பிளக்ஸ், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 
 
வருகின்ற டிசம்பர் 3- ம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஹோப்காலேஜ் பகுதியில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி, ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தார். இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடர்ந்த வழக்கில்,  விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட பிளக்ஸ், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் கோவை- அவிநாசி சாலையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

- அருள்

சார்ந்த செய்திகள்