Skip to main content

உத்தரபிரதேச அரசை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். 

 

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (02.10.2020) சென்னை, அமைந்தகரை பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் உத்தரபிரதேச அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்