Skip to main content

ஜனவரி 9- ஆம் தேதி நியாய விலைக்கடைகள் இயங்காது!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Fair price shops will not be open on January 9th!

 

ஜனவரி 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நியாய விலைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் வே.ராஜாராமன், நேற்று (06/01/2021) மாவட்ட ஆட்சித்தலைவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்கள், அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

அதில், தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வரும் வரும் ஜனவரி 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகள், வரும் ஜனவரி 9- ஆம் தேதி அன்று செயல்படாது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

 

மாவட்ட ஆட்சித் தலைவர்கள்/ துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு/ தெற்கு உள்ளூர் சூழ்நிலைக்கேற்ப ஜனவரி 9- ஆம் தேதி அன்று பொங்கல் பரிசு பெற டோக்கன்கள் பெற்ற அட்டைத்தாரர்களுக்கு வரும் ஜனவரி 13- ஆம் தேதிக்கு முன்பாக விநியோகம் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்