Skip to main content

ஆத்தூர் அ.தி.மு.க.ஒன்றியத்தில் கோஷ்டி பூசல் உச்சகட்டம்;ஒன்றிய செயலாளர் படத்தை போடாமல் விளம்பரம் செய்த நிர்வாகிகள்!!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

டி.டி.வி. அணிக்கு மாற திட்டமிடும் அ.தி.மு.க.புள்ளிகளால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அ.தி.மு.க. கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் அம்பலமானது. 

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் பி.கே.டி.நடராஜன் இவர் ஒன்றிய செயலாளர் பதவியுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் கடந்த முறை பதவி வகித்தார். ஜனதா கட்சியிலிருந்து விலகி இரு வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்த அவர் படிப்படியாக வளர்ச்சி கண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இவர் தற்போது கட்சி தொண்டர்களை மதிக்காமல் தனக்கு கீழ் செயல்படும் நால்வர் அணியை வைத்துக்கொண்டு கட்சியை நடத்தி வந்ததால் கடந்த ஐந்து வருடங்களாக ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.வில் பலத்த கோஷ்டி பூசல் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவிற்கு முன்வரை அமைதிகாத்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தற்போது தங்கள் கோபத்தை வெளிக்காட்ட தொடங்கிவிட்டார்கள். ஒன்றிய துணைச் செயலாளர் மணலூர் சின்னச்சாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆத்தூர் தேவராஜன், ஒன்றிய பொருளாளர் எம்.ஆர்.எஸ்.முனியப்பன், ஒன்றிய பாசறை தலைவர் சேடபட்டி ராஜேந்திரன், மணலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரத்தினகுமார் உட்பட பலர் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக காட்ட தொடங்கிவிட்டனர். 

 

Factional conflict

 

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சின்னாளபட்டியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வரும் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனை வரவேற்று விசுவநாதனின் விசுவாசிகளான மேற்கண்ட புள்ளிகள் தங்களது எதிர்ப்பை பிளக்ஸ் போர்டிலும், தினசரி நாளிதழ் விளம்பரத்திலும் காட்ட தொடங்கினார்கள். இதில் அனைத்து விளம்பரங்களிலும் ஒன்றிய செயலாளரான பி.கே.டி.நடராஜன் படம் இல்லாமல் வெளிவந்துள்ளது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து மணலூர் சின்னச்சாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், பி.கே.டி. நடராஜன் ஒன்றிய செயலாளராக இருந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குடியிருக்காமல் திண்டுக்கல்லைத் தாண்டி சௌந்திரராஜா ஏர்போர்ட் நகரில் குடியிருப்பதால் மலையில் உள்ள தொண்டர்கள் இவரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகின்றனர். தொண்டர்களோ, கட்சி நிர்வாகிகளோ செல்போனில் தொடர்பு கொண்டால் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்கள். 

 

Factional conflict

 

பி.கே.டி. நடராஜன் ஆதரவாளர்கள் இதுகுறித்து கூறும்போது... மணலூர் சின்னச்சாமி கோஷ்டி எப்போதுமே கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில்தான் செயல்படும். கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியின் போது நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு மணலூர் சின்னச்சாமி, அவருடைய மகன் ரத்தினகுமார், மற்றொரு மகன் தமிழ், மனைவி, மருமகள் என அனைவருக்கும் கட்சி பதவிகளை பகிர்ந்து கொடுத்துவிட்டு தொண்டர்களை ஏமாற்றிவிட்டார். இதனால் இவரோ, இவருடைய மகனோ மணலூர் ஊராட்சியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றனர்.

 

Factional conflict

 

ஒன்றிய செயலாளர் படத்தை போடாமல் நத்தம் விசுவநாதனின் மருமகனான ஆர்.வி.என்.கண்ணனின் படத்தை போட்டு  பிளக்ஸ் வைத்திருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் இவர் பின்னால் செல்லமாட்டார்கள் என்றனர். ஏற்கனவே டி.டி.வி. தினகரன் கோஷ்டி வளைத்து வளைத்து தங்கள் கட்சிக்கு ஆட்களை சேர்த்து வரும் இந்த நேரத்தில் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கோஷ்டி பூசல் அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மொத்தத்தில் அ.தி.முக. ஆத்தூர் ஒன்றியத்தில் அம்போவாவது உறுதியாகிவிட்டது. ஆறுதலான விசயம் என்னவென்றால் சின்னாளபட்டி நகர செயலாளர் கணேஷ்பிரபு வைத்த பிளக்ஸ் போர்டில் மட்டும் அதிசயமாய் பி.கே.டி.நடராஜன் படம் இருந்தது!

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.