Skip to main content

தீபாவளிக்கு வாங்கும் சுவீட் கெட்டுப் போயிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்... திருச்சி அஸ்வீன் சுவீட் கடையில் அச்சு முறுக்கில் பூசனம் பூத்திருப்பதாகப் புகார்!!! 

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
experied food

 

தீபாவளி சீசன் நேரத்தில் திருச்சியில் ஒரு ஸ்வீட் கடையில் அச்சுமுறுக்குப் பூசனம் பூத்து இருப்பதைப் பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து புகார் செய்திருக்கிறார். 
 

சட்டகல்லூரியில் பேராசிரியராக இருப்பர் முருகேஷன் இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அஸ்வீன் ஸ்வீட் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்குத் தீபாவளியை முன்னிட்டு அச்சு முறுக்குப் பாக்கெட் ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். 
 

வீட்டிற்குச் சென்று தன்னுடைய குழந்தைக்கு ஆசையாக எடுத்துப் போது அந்தப் பாக்கெட்டில் உள்ள அச்சு முறுக்குப் பூசம் பூத்து போய் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து. திரும்பவும் கே.கே.நகர் கடைக்குக் கொண்டு வந்து திரும்ப இவ்வளவு பெரிய கடையில் நீங்கள் கொடுத்த இந்த முறுக்கு ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்க கடையின் நிர்வாகமோ இல்ல அது பழைய பாக்கெட்டாக இருக்கும் என்று மறுக்க இல்ல நீங்களே பாருங்க என்று கொடுக்க உற்பத்தி செய்து 1 மாதம் ஆகியிருப்பதாகத் தேதி இருப்பதைப் பார்த்து அஸ்வீன் ஊழியர்கள் சாரி சார் தவறு நடந்திருக்கிறது என்று மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள். 
 

கோபமான பேராசிரியர் என்ன சார் இவ்வளவு ஈசியா சாரி சொல்றீங்க இந்த அச்சு முறுக்கு உங்க கடை பிரபலமாகக் காரணம் அப்படிப் பட்ட அச்சு முறுக்கை இப்படிக் கவனக்குறைவாகப் பூசம் பூத்து எங்களுக்குக் கொடுத்திருக்கீறீர்கள். அதைக் குழந்தை சாப்பிட்டிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று அதை நினைத்து பார்த்தீர்களா? என்று சொல்லி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புகார் செய்திருக்கிறார். 
 

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் இது குறித்துப் பேசிய போது அவர்கள்.. இந்த மாதிரி விழாக்காலங்களில் சுவீட் போன்ற உணவு திண் பண்டங்கள் வாங்கும் போது உணவு பண்டங்களில் கெட்டுப் போன பொருட்கள் இருப்பதைப் பார்த்தால் 9444042322 என்கிற எண்ணிற்குக் கெட்டு போன பொருளையும் அந்தக் கடையை உடனே படம் பிடித்து வாட்ச்ஆப்பில் புகார் செய்யவும் என்று அறிவுறுத்தினார்கள். அஸ்வீன் சுவீட் கடையின் நிர்வாகம் தங்கள் வழங்கிய அச்சு முறுக்கில் பாசனம் பூத்து இருப்பமாக எழுதியும் கொடுத்திருக்கிறார்கள். 
 

பெரம்பலூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அஸ்வீன் சுவீட் திருச்சி, பெரம்பலூர் பகுதியில் 10 இடங்களுக்கு மேல் கிளை வைத்திருக்கும் கடை பிரபலமடையக் காரணமாக இருந்த அச்சு முறுக்கிலே பிரச்சனை என்பது அதிர்ச்சியளிக்கும் விசயமாக இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.